Advertisment

கெம்பேகவுடா சிலை மாயம் செய்யுமா? வொக்கலிகா வாக்குகளைப் பெற பா.ஜ.க புதிய முயற்சி

கெம்பேகவுடா சிலையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறார். தெற்கு கர்நாடகாவில் உள்ள சமூகத்தை ஈர்ப்பதற்காக பா.ஜ.க மேற்கொண்ட முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kempegowda, Kempegowda statue, Bengaluru Kempegowda statue, கெம்பேகவுடா சிலை, கர்நாடகா, வொக்கலிகா வாக்குகள், பா.ஜ.க புதிய முயற்சி, மோடி, Bengaluru news, Tamil Indian Express news

பெங்களூரு நகரத்தை நிறுவியவராகக் கருதப்படும் கெம்பேகவுடாவின் 108 அடி சிலை நவம்பர் 11-ம் தேதி திறக்கப்படும்போது, ​​கர்நாடகாவின் மிக உயரமான வெண்கலச் சிலையாக வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பிடிக்கும். கர்நாடக மாநிலம், தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே 23 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாரம்பரிய பூங்காவில், 85 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால், வாக்குகளைக் கவரும் வகையில் அமையும்ம் என ஆளும் பா.ஜ.க நம்புகிறது.

Advertisment

பாரம்பரியமாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் தெற்கு கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகமாக உள்ள வொக்கலிகா சமூகத்தை கவர்ந்திழுக்கும் பா.ஜ.க-வின் முயற்சியாக இந்த பிரம்மாண்ட சிலை திறக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

நெறுக்கமான போட்டி

சிலை திறப்பு விழாவை அரசியல் விழாவாக மாற்றும் பா.ஜ.க-வின் முயற்சி வெற்றி பெறும் என்று தெரிகிறது. ஏற்கனவே, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி அரசியல்மயமாக்கும் முயற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, மாநிலம் முழுவதும் 22,000க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சேகரிக்கும் நோக்கில் பா.ஜ.க சார்பில் ‘புனித மண்’ எடுக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண், சிலை நிற்கும் பீடத்தின் நான்கு கோபுரங்களில் ஒன்றின் கீழ் உள்ள மண்ணுடன் கலக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை மாநில உயர்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் சி.என். அஸ்வத்நாராயணன் தலைமை தான்க்கினார். வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த இவர், பழைய மைசூர் பகுதியில் வொக்கலிகா சமூகத்தின் மறுக்கமுடியாத தலைவராக வெளிவர கடுமையாக முயற்சிக்கும் பல பா.ஜ.க தலைவர்களில் ஒருவர். இந்த முயற்சியின் மூலம் அவரது கனவு நனவாகும் என்று எதிர்பார்க்கிறார்.

பல ஆண்டுகளாக, தெற்கு கர்நாடகாவில் பா.ஜ.க சரியாக செயல்படவில்லை. 2018 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் ஊக்கமளிக்கும் முடிவுகளுடன், பா.ஜ.க இங்கு காலூன்றுவதற்கு இரண்டு பலத்துடன் உள்ளது. இங்கு காலூன்றுவதற்கான அதன் முயற்சிகள் இரகசியமானதல்ல. ஏற்கெனவே, கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு கர்நாடகாவின் லிங்காயத் சமூகம் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க, முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா காலத்துக்கு பிறகு, அம்மாநிலத்தில் நிச்சயமற்ற எதிர்காலத்தை கண்டாலும்கூட, வொக்கலிகா சமூகத்தின் மையப்பகுதியில் பெறும் எந்த ஆதாயமும் அரசியல் போக்கை மாற்றும்.

பா.ஜ.க-வில் உள்ள வொக்கலிகா தலைவர்கள் யாரும் அவர்கள் சமூகத்திற்குள் தங்களை முக்கிய தலைவராக முன்னிறுத்துவதில் வெற்றி பெறவில்லை. வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக் போன்றவர்கள் - எடியூரப்பா ஆதரவாளராக உள்ளனர். பா.ஜ.க பொதுச் செயலாளர் சி.டி. ரவி, மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் கே. சுதாகர் - 2019-ல் பாஜகவுக்குத் தாவிய அஷ்வத்நாராயணன் ஆகியோர் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஹெச்.டி. தேவ கௌடா, தேவகவுடா, முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி மற்றும் ஓரளவிற்கு கார்நாடக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே. சிவகுமார் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மாறாக தங்களை சமூகத் தலைவர்களாக நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை.

அசோக், தேவகவுடா குடும்பத்துடன் புரிதல் உள்ளவராகக் குற்றம் சாட்டப்பட்டாலும், அஸ்வத் நாராயணன் டி.கே. சகோதரர்களுடன் (சிவகுமார் மற்றும் பெங்களூரு புறநகர் எம்.பி. டி.கே. சுரேஷ்) சண்டை போடுவது அவருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ரவி மற்றும் சுதாகர் ஆகியோர் தங்கள் சொந்த தொகுதிகளின் எல்லைக்கு அப்பால் வளர கடுமையாக முயற்சி செய்கிறார்கள். முன்னாள் பிரதமர் தேவகவுடா அச் சமூகத்தின் உயர்மட்ட தலைவராக தொடர்ந்து இருக்கிறார்.

2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வொக்கலிகா சமூகத்தின் பிம்பமான கெம்பேகவுடாவை கையகப்படுத்தும் முயற்சிகளைத் தவிர, அச்சமூகத்தின் மிக முக்கியமான மடங்களில் ஒன்றான ஆதிசுஞ்சனகிரி மடத்தை பா.ஜ.க பல ஆண்டுகளாக வசதியாக மாற்ற முயற்சிக்கிறது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சுவாமி நிர்மலானந்தநாதா இருவரும் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் - நாத் பந்து, சைவக் குழு - அரசியல் ரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிர்மலானந்தநாதாவை கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட வலியுறுத்தியதாக ஊகங்கள் கூட உலா வந்தன. ஆனால், அது நிறைவேறவில்லை.

அரசியல் காரணங்களுக்காக கெம்பேகவுடாவை பாஜக பயன்படுத்துவதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி சாடியுள்ளார். “கெம்பேகவுடா சிலையை நிறுவுவது வொக்கலிகாக்களின் வாக்குகளைப் பெற உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் ஒரு மாயையில் உள்ளனர். மக்கள் விரைவில் அவர்களுக்கு யதார்த்தத்தை காட்டுவார்கள்” என்று முன்னாள் முதல்வர் ஹெச்.டி குமாராசாமி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Karnataka Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment