Advertisment

விழிஞ்சம் துறைமுக திட்டத்தை கைவிட மாட்டோம்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

முந்தைய அரசாங்கத்தின் திட்டத்தை கைவிடுவது முதலீட்டாளர்களை ஒதுக்கி வைப்பதாகவே அர்த்தம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vizhinjam seaport project

Kerala CM Pinarayi Vijayan

மீனவர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வரும் விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை எப்படி வந்தாலும் அரசு கைவிடாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

Advertisment

திட்டம் கைவிடப்பட்டால், அது மாநிலத்தின் நம்பகத்தன்மையை மோசமாக பாதிக்கும், என்று விஜயன் ஒரு அரசு விழாவில் பேசுகையில் கூறினார்.

விழிஞ்சம் சர்வதேச துறைமுக லிமிடெட் (VISL) கட்டுமானத்திற்கு எதிராக திருவனந்தபுரம் லத்தீன் கத்தோலிக்க உயர்மறைமாவட்ட மதகுருமார்கள் தலைமையில் மீனவர்கள் போராட்டம் நடத்தியதைக் குறிப்பிட்டு, முதல்வர் பேசுகையில்; இந்த போராட்டம் அரசுக்கு எதிரானது அல்ல. இது மாநிலத்தின் முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் முறியடிப்பதாகும். எந்த தோற்றத்தில் வந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. அரசாங்கத்தை அச்சுறுத்தலாம் என்று நினைக்க வேண்டாம். விழிஞ்சம் துறைமுகம் திட்டம் நடக்கும்.

2016-ம் ஆண்டு இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிக்கு வந்தபோது, ​​துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் கணிசமாக நடைபெற்றன. எல்.டி.எப் மற்றும் யு.டி.எஃப் இடையே கொள்கைகளில் வேறுபாடுகள் இருக்கும். ஆனால், முந்தைய அரசு தொடங்கிய திட்டத்தை ஒரு அரசு கைவிட்டால், நம் மாநிலத்தில் யாரும் முதலீடு செய்ய வர மாட்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் ஏழு கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளை அரசு நிவர்த்தி செய்துள்ள நிலையில், திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று விஜயன் கூறினார்.

மேலும் மாநில மீன்வளத்துறை அமைச்சர் அப்துரஹிமான் பெயரில் தீவிரவாதி இருப்பதாக கத்தோலிக்க பாதிரியார் தியோடாசியஸ் டி குரூஸின் கருத்துக்கு விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஒரு அமைச்சரின் பெயர் அப்துரஹிமான் என்பதற்காக எப்படி அவரை துரோகி என்று சொல்ல முடியும். நாம் எதை நோக்கி செல்கிறோம். மாநிலத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் குலைக்க நினைக்கிறார்கள், என, முதல்வர் கூறினார்.

துறைமுகத்துக்கு எதிரான போராட்டம் தேசத்துரோகம் என்ற அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பாதிரியார் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மன்னிப்புக் கேட்ட டி'குரூஸ் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

வியாழன் அன்று, பாதிரியாரின் மன்னிப்பை ஏற்க மறுத்த அமைச்சர், அவரது மன்னிப்பை ஒட்டுமொத்த சமூகம் ஏற்காது. கேரளா மத நல்லிணக்க நிலம், சட்டம் அதன் போக்கில் செல்லட்டும் என்றார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் வி டி சதீசன், அரசாங்கம் போராட்டக்காரர்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டினார், ஆனால் எந்த வன்முறைக்கும் இடமில்லை என்று கூறினார். பிஷப் மற்றும் பிற பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கம் போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டது.

போராட்டத்தை கலவரமாகவும், போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாகவும் மாற்ற அரசு விரும்பியது. மீனவர்கள் மறுவாழ்வு கோரினர், ஆனால் விஜயன் அதை பயங்கரவாதமாக சித்தரிக்க விரும்பினார், என்றார்.

போராட்டத்துக்கு பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக சிபிஐ (எம்) நாளிதழான தேசாபிமானியின் செய்தியைக் குறிப்பிட்ட சதீசன், போராட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவது வருந்தத்தக்கது என்றார். கட்சி நாளிதழ் வன்முறைக்கு சதி செய்தவர்கள் என ஒன்பது பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜுவின் சகோதரர். சிபிஐ (எம்) நாளிதழ் குற்றம் சாட்டியது போல் அவரது சகோதரருக்கு பயங்கரவாத தொடர்பு உள்ளதா என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தட்டும்.

மற்றொரு புகைப்படம், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அந்தோணி ராஜு மற்றும் சிபிஐ (எம்) சட்டமன்ற உறுப்பினர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோருக்காக பிரச்சாரம் செய்த பாதிரியார். போராட்டம் நடத்தும் விவசாயிகளை நகர்ப்புற நக்சல்கள், மாவோயிஸ்டுகளாக சித்தரித்த மோடி போல் பினராயி நடந்து கொள்கிறார் என்று சதீசன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment