Advertisment

பிரதமர் கௌரவத்தை நிராகரித்த 8 வயது சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Licypriya Kangujam, modi #sheinspiresus, modi on womens day, pm modi on womens day, லிசிபிரியா, கங்குஜம், கங்குஜாம், ஷி இன்ஸ்பயர்ஸ் அஸ், பிரதமர் மோடி, மகளிர் தினம், modi social media account, who is Licypriya Kangujam, காலநிலை மாற்ற செயல்பாட்டாள சிறுமி, Licypriya Kangujam turns down modi's honour, Licypriya Kangujam refuses modi's she inspires us campaign

Licypriya Kangujam, modi #sheinspiresus, modi on womens day, pm modi on womens day, லிசிபிரியா, கங்குஜம், கங்குஜாம், ஷி இன்ஸ்பயர்ஸ் அஸ், பிரதமர் மோடி, மகளிர் தினம், modi social media account, who is Licypriya Kangujam, காலநிலை மாற்ற செயல்பாட்டாள சிறுமி, Licypriya Kangujam turns down modi's honour, Licypriya Kangujam refuses modi's she inspires us campaign

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு #SheInspiresUs பிரச்சாரத்தில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடியின் மரியாதையை மணிப்பூர் காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் 8 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜாம் நிராகரித்தார்.

Advertisment

அரசு எட்டு வயது சிறுமியைப் பற்றிய கதையை டுவிட்டரில் உத்வேகமாக பகிர்ந்தது. லிசி பிரியா என்ற சிறுமி மணிப்பூரைச் சேர்ந்த ஒரு குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலர். 2019 ஆம் ஆண்டு அவருக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் குழந்தைகள் விருது, உலக குழந்தைகள் அமைதி பரிசு, மற்றும் இந்தியா அமைதி பரிசு வழங்கப்பட்டது. அவர் ஊக்கமளிப்பவர் இல்லையா? அவரைப் போன்ற ஒருவரை உங்களுக்குத் தெரியுமா? #SheInspiresUs ஷி இன்ஸ்பயர்ஸ் அஸ் ஹேஷ்டேட் பயன்படுத்தி எங்களிடம் கூறுங்கள்” என்று மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் அரசு வெளியிட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்திய லிசி பிரியா கங்குஜம், அரசின் அறிவிப்புக்கு பதிலளித்து பேசுகையில், “அன்புள்ள நரேந்திர மோடி ஜி, நீங்கள் என் குரலைக் கேட்கப் போவதில்லை என்றால் தயவுசெய்து என்னைக் கொண்டாட வேண்டாம். உங்கள் முன்முயற்சியின் கீழ் நாட்டின் ஊக்கமளிக்கும் பெண்களில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. #SheInspiresUs பற்றி பலமுறை யோசித்த பிறகு, இந்த மரியாதையை நிராகரிக்க முடிவு செய்தேன். ஜெய் ஹிந்த்! ” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, indianexpress.com உடன் பேசிய கங்குஜம், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் பெறுவது ஒரு மரியாதை. ஆனால், காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான அவரது கோரிக்கைகள் கேளாமை தொடர்பாக அவரால் பார்க்க முடியவில்லை என்று கூறினார்.

மேலும், கங்குஜம் கூறுகையில், “இந்த பிரசாரம் அவர்களுக்கு ஒரு நல்ல முன்முயற்சியாக இருக்கலாம். ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கருத்தில் கொண்டு, இது எதையும் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இது நம்முடைய முகத்தில் ஒரு ஃபேர்னஸ் கிரீம் பயன்படுத்துவதைப் போல இருக்கும். அதை துடைத்தவுடன் பிறகு இருக்காது. அதற்கு பதிலாக, பிரதமர் மோடி என் குரலைக் கேட்க வேண்டும். நம்முடைய தலைவர்கள் காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

லிசிபிரியா கங்குஜமின் மறுப்பு அவரது கவலைகளை நோக்கி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க உதவும் என்று அவர் நம்பினார். “எனக்கு முதலில் செய்தி கிடைத்ததும், என்னால் நம்ப முடியவில்லை. அதை உறுதிப்படுத்திய பிறகு, நான் பெருமிதம் அடைந்தேன். ஆனால், மிகவும் வருத்தமாக இருந்தது. எனது கோரிக்கைகளை தொடர்ந்து அரசாங்கங்களுக்கு முன்வைப்பதை விட, அத்தகைய அங்கீகாரத்தை ஏற்க வேண்டுமா என்று நானே கேட்டுக்கொண்டேன்”என்று கங்குஜம் கூறினார்.

தனது நிராகரிப்பு குறித்து கங்குஜம் கூறுகையில், “எனது நிராகரிப்பு எனது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். எனது கவலைகளைப் பற்றி விவாதிக்க நான் அழைக்கப்படவில்லை அல்லது அழைக்கப்படவில்லை. நம்முடைய தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஒருபோதும் காலநிலை மாற்றத்தை ஒரு தீவிரமான பிரச்சினையாக கருதுவதில்லை. அதுவே சோகமான பகுதியாக இருக்கலாம்.” என்று கூறினார்.

கார்பன் வெளியேற்றம் மற்றும் பிற பசுமைக் குடில் வாயுக்களைக் கட்டுப்படுத்த ஒரு சட்டத்தை சிறுமி செயற்பாட்டாளர் வலியுறுத்தி வருகிறார். பள்ளி பாடத்திட்டத்தில் காலநிலை மாற்றத்தை கட்டாய பாடமாக சேர்க்கவும் அவர் முயன்று வருகிறார்.

இதுமட்டுமில்லாமல், இறுதித் தேர்வுகளை முடிக்கும் முன்னர், மாணவர்களால் குறைந்தபட்சம் 10 மரங்கள் நடவு செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்த மூன்று கொள்கைகளும் மாற்றப்படக்கூடியவை. உலகின் பிற நாடுகளும் இதைப் பின்பற்றலாம். இது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும், உலக அமைப்பை மாற்றவும் உதவும்” என்று அவர் கூறியுள்ளார்.

‘இந்தியாவின் கிரெட்டா’ என்று அடிக்கடி குறிப்பிடப்படும் கங்குஜம், ஜூலை 4, 2018 அன்று ஐ.நா. நிகழ்வில் மங்கோலியாவில் உலகத் தலைவர்களிடையே உரையாற்றியதாகக் கூறினார். பின்னர், உலகத் தலைவர்களை உடனடியாக காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்து அவர் 'குழந்தை இயக்கம்' தொடங்கினார். 2019 ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் முன்பு தான் ஒரு வாரம் நடத்திய போராட்டத்தின் காரணமாக ஊடகங்கள் அவரைக் கவனித்தன என்று அவர் கூறினார்.

Narendra Modi Womens Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment