கால்நடைக்கான வர்த்தகத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, வர்த்தக நோக்கில் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்து, மத்திய அரசு கடந்த 26-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, நாடு முழுவதும் இந்த உத்தரவிற்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளாவில், மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக மாட்டுக்கறி உண்ணும் திருவிழா நடத்தப்பட்டது. தமிழகத்திலும், பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என ராஸ்தான் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.