Advertisment

ஃபட்னாவிஸ் அரசு அமைத்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் 80 நிமிடம் காரசார விவாதம்

மகாராஷ்டிரா ஆளுநர் தேவேந்திர ஃபட்னாவிஸ்ஸை முதல்வராகவும், என்சிபி தலைவர் அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்ய மஹாராஷ்டிரா ஆளுநர் எடுத்த முடிவுக்கு எதிராக சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் தனது உத்தரவை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
maharashtra government, maharashtra, maharashtra news, ajit pawar, maharashtra election, maharashtra govt formation,ஃபட்னாவிஸ் அரசு அமைத்த விவகாரம், maharashtra govt formation 2019, maharashtra government formation, maharashtra government formation 2019, உச்ச நீதிமன்றத்தில் 80 நிமிடம் காரசார விவாதம், சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி, பாஜக, maharashtra floor test, maharashtra floor test date, maharashtra floor test news, maharashtra floor test 2019 live, supreme court on maharashtra, supreme court on maharashtra news

maharashtra government, maharashtra, maharashtra news, ajit pawar, maharashtra election, maharashtra govt formation,ஃபட்னாவிஸ் அரசு அமைத்த விவகாரம், maharashtra govt formation 2019, maharashtra government formation, maharashtra government formation 2019, உச்ச நீதிமன்றத்தில் 80 நிமிடம் காரசார விவாதம், சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி, பாஜக, maharashtra floor test, maharashtra floor test date, maharashtra floor test news, maharashtra floor test 2019 live, supreme court on maharashtra, supreme court on maharashtra news

மகாராஷ்டிரா ஆளுநர் தேவேந்திர ஃபட்னாவிஸ்ஸை முதல்வராகவும், என்சிபி தலைவர் அஜித் பவாரை துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்ய மஹாராஷ்டிரா ஆளுநர் எடுத்த முடிவுக்கு எதிராக சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் தனது உத்தரவை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

Advertisment

நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, தேவேந்திர ஃபட்னாவிஸ்ஸை அரசு அமைக்க அழைத்ததற்கான முக்கிய கடிதங்களை கவனித்தனர். மத்திய அரசால் சமர்ப்பிக்கப்பட்ட அரசு அமைப்பதற்கு உரிமை கோருவதற்கு தேவையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை கோரும் பாஜக தலைவரின் கடிதத்தையும் கவனித்தனர். பின்னர் நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

மகாராஷ்டிராவின் அரசியல் சூழ்நிலையில் எதிர்பாராத திடீர் திருப்பங்களும் வளைவுகளும் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை 12 மணி நேரத்தில் நடந்தன. அன்று அதிகாலை தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சரவைக் கூட்டம் இல்லாமல் ஒப்புதல் அளிக்க சிறப்பு விதியைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடியுடன் காலை 5.47 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்ட பின்னர் சனிக்கிழமை காலை 7.50 மணிக்கு பதவிப்பிரமாணம் நடைபெற்றது.

ஆளுநரின் முடிவை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை அவசர விசாரணைக்கு மூன்று கட்சிகளும் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தன. என்.சி.பியின் 54 எம்.எல்.ஏ-க்கள் உட்பட 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக பாஜக உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில், 50 -க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் இருப்பதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 80 நிமிடங்கள் நடைபெற்றபோது எவ்வாறு வாதிடப்பட்டது?

மகாராஷ்டிராவில் உச்சபட்ச அரசியல் நாடகம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்படலாம் என்ற அச்சத்திற்கு இடையில், மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு திங்கள்கிழமை 10:30 மணிக்கு மீண்டும் விசாரணையைத் தொடங்கியது. மகாராஷ்டிராவில் அரசு அமைக்க அழைக்கப்பட வேண்டும் என்ற சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் கட்சிகளின் வேண்டுகோளை பரிசீலிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதனிடையே, மத்திய அரசை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பிரதிநிதித்துவப் படுத்தினார். அதே நேரத்தில், ஆளுநர் மற்றும் ஃபட்னாவிஸின் கடிதங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

துஷார் மேத்தா, அஜித் பவாரின் கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தார். அதில் ஒரு நிலையான அரசுக்காக நாங்கள் தேவதேந்திர ஃபட்னாவிஸ்ஸை ஆதரித்து அவருக்கு கீழ் உள்ள அரசில் சேர முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

மகாராஷ்டிரா ஆளுநர் ஃபட்னாவிஸ்ஸை அரசு அமைக்க அழைத்தது சரியானது: ரோஹத்கி

உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா பாஜகவுக்காக ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “இன்று ஆளுநரின் பதிவு வைக்கப்படும். ஃபட்னாவிஸ்ஸின் கடிதத்துடன் நான் அதைப் பார்த்தேன். அனைத்து என்.சி.பி எம்.எல்.ஏ.-க்களின் கையொப்பங்களுடன் சட்டமன்றக் கட்சி தலைவரான அஜித் பவார் எழுதிய கடிதம் இருந்தது. அதனால், அரசு அமைப்பதற்கான அழைப்பை வழங்குவதில் ஆளுநர் சரியாக இருந்தார்.” என்று கூறினார்.

நீதிபதிகள் அமர்வு முன்பு பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயர் நீதிமன்றம் கோரிய கடிதங்கள் தன்னிடம் இருப்பதாக கூறினார். ஆளுநரின் பார்வையில் இருந்து ஏதோ ஒன்றை சமர்ப்பிக்க விரும்புவதாக அவர் கூறினார். 32வது பிரிவு மனுவில் நீதிமன்றம் ஆளுநரின் புத்திசாலித்தனத்தை மாற்ற வேண்டுமா என்பது தான் அவர் கூற விரும்பும் கேள்வி என்றார்.

நீதிமன்றத்தில் தனது வாதங்களைத் தொடர்ந்த வழக்கறிஞர் மேத்தா, “மகாராஷ்டிரா ஆளுநர் மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துவதற்கு வழிவகுத்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, உண்மைகள் மற்றும் நிலைமைகளை அறிந்திருந்தார். மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சியும் அரசு அமைக்கும் நிலையில் இல்லை என்று உறுதி அளிக்கப்பட்ட பின்னர், ஆளுநர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைத்தார்.” என்றார். மேலும் அவர், ஆளுநர் சிவசேனா, பாஜக என்.சி.பி ஆகிய கட்சிகளை அரசு அமைக்க அழைத்திருந்தார். அவை தோல்வியடைந்த பின்னரே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஆளுநர் தேவையில்லாமல் உறுப்பினர்கள் எண்ணிக்கையை கண்டறிய விசாரணை நடத்த வேண்டியதில்லை: மத்திய அரசு

“மகாராஷ்டிரா ஆளுநர் அரசு அமைப்பதற்கு எந்தக் கட்சிக்கு எவ்வளவு உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளனர் என்பதைக் கண்டறிய சம்பந்தமில்லாமல் உள்நோக்கத்துடன் விசாரணை நடத்த வேண்டியதில்லை. 24 மணி நேரத்திற்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரி ஒரு கட்சி வர முடியுமா என்பதுதான் கேள்வி” என்று சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா கூறினார்.

ஆதரவுக் கடிதம் தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி அசோக் பூஷண்

எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்துக்களைக் குறிப்பிட்ட நீதிபதி அசோக் பூஷண், எம்.எல்.ஏக்களின் கையொப்பங்கள் “அவர்கள் யாருக்கும் ஆதரவளிப்பதாகச் சொல்ல வில்லை” என்றார். இதற்கு, ரோஹத்கி ஆதரவு கடிதம் மற்றும் கையொப்பங்கள் இணைப்பு படிவத்தில் உள்ளன என்று கூறினார்.

எல்லா நிகழ்வுகளிலும், 24 மணி நேரத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடைபெற்றது: நீதிபதி சஞ்சீவ் கன்னா

நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறுகையில், “எல்லா நிகழ்வுகளிலும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துவது அனைத்து தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நடைபெற்றுள்ளது.” என்றார்.

மகாராஷ்டிரா தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மேலும் நேரம் கோரிய மத்திய அரசு

மகாராஷ்டிரா தொடர்பாக பதிலைத் தாக்கல் செய்ய மேலும் நேரம் கோரிய சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா கூறுகையில், “சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் இடையே இணைப்பு நீடிக்குமா என்பதை ஆளுநர் சோதிக்க விரும்புகிறார். ஆளுநருக்கு வழிகாட்டுதல்களை வழங்குவது எதிர்கால தேர்தல்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூரினார்.

அஜித் பவாருக்கு 54 என்.சி.பி எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு இருப்பதாக கூறிய ரோஹத்கி

“நான் அஜித் பவாரை சந்தித்தேன். அவருக்கு 54 என்.சி.பி எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு உள்ளது. எனவே, ஆளுநர் அவரை அரசு அமைக்கச் சொன்னார்” என்று வழக்கறிஞர் ரோஹத்கி கூறினார். கடிதம் போலியானது என ஒவருடைய வழக்கும் இல்லை. ஆளுநர் சரியாக செயல்பட்டார். எனவே, அது அவர்களுடைய வேலை முடிந்துவிட்டது” என்று பாஜகவுக்கான ஆலோசகர் கூறினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி, வழக்கறிஞர் ரோஹத்கி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பு குறித்து வாதம்

“சட்டமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவை முதலமைச்சர் பெற்றுள்ளாரா என்பதை தீர்மானிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் அமர்வு கூறினர். இதற்கு வழக்கறிஞர் ரோஹத்கி கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் சட்டமன்றத்தில் பெரும்பாண்மையை நிரூபிக்க உத்தரவிட முடியுமா என்று நீதிமன்றத்தால் கூற முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கும் சோதனை இறுதி சோதனை என்று யாரும் தகராறு செய்யவில்லை. 24 மணி நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று எந்த தரப்பினரும் கூற முடியாது. ஒரு குறிப்பிட்ட கால அளவில் குறிப்பிட்ட கட்சியின் பயம் காரணமாக செயல்படுத்துமாறு கேட்க முடியாது.” என்று கூறினார்.

கட்சித் தாவலை உச்ச நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என்று கூறிய அஜித் பவாரின் ஆலோசகர்

அஜித் பவார் சார்பில் வழக்கறிஞர் மனிந்தர் சிங் கூறுகையில், “எனக்கு எம்.எல்.ஏ.க்கள் அதிகாரம் அளித்தனர். தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நான்தான் என்.சி.பி என்பதை தெளிவுபடுத்துகிறது. அதை யாரும் எதிர்க்கவில்லை. இந்த கடிதங்களில் சட்டப்பூர்வமாக எதுவும் இல்லை என்றால், சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் மனுக்களிலும் எதுவும் இல்லை. கட்சித் தாவலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று நீதிமன்றம் கூற வேண்டும். மேலும், உயர் நீதிமன்றத்தை அணுகும்படி அவர்களிடம் கேட்க வேண்டும்.” என்று கூறினார்.

மகாராஷ்டிரா ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டாம்; உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்திய மத்திய அரசு

பாஜகவுக்கான ஆலோசகர் கூறுகையில், “இந்த விவகாரம் கடுமையான விளைவுகளால் நிறைந்திருக்கிறது. ஆளுநரின் விருப்ப அதிகாரத்தை நீதித்துறை மறுஆய்வு செய்ய முடியாது” என்று கூறினார். மேலும், இதுபோன்ற விவகாரங்களில் சபாநாயகரின் அதிகாரத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆராய வேண்டும் என்றும், ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டாம் என்றும் மேத்தா உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சோதனையில் இருந்து அஜித் பவார் ஏன் விலகுகிறார் கபில் சிபல் கேள்வி

“இன்று, அஜித் பவார் தனக்கு 54 என்.சி.பி எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவர் அந்த பதவியில் இருந்தும் என்.சி.பி-யிலிருந்து நீக்கப்பட்டார். அவர்களுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர்கள் ஏன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சோதனையிலிருந்து விலக வேண்டும்? இவ்வளவு நேரம் காத்திருந்த ஆளுநர் ஏன் இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க முடியாதா?   சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸின் கூட்டணியை முன்கூட்டியே தவிர்த்து காலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்துசெய்து ஃபட்னாவிஸ் பதவியேற்பு செய்வதற்கு அப்படி என்ன தேசிய அவசரநிலை?”என்று கபில் சிபல் கூறினார்.

எம்.எல்.ஏ.-க்களின் அசல் பிரமாணப் பத்திரம் எங்களிடம் உள்ளது: கபில் சிபல்

154 எம்.எல்.ஏ.-க்களின் அசல் பிரமாணப் பத்திரங்கள் எங்களிடம் உள்ளன. அஜித் பவாரை ஆதரிக்கவில்லை என்று என்சிபி எம்.எல்.ஏ.-க்கள் கூறியுள்ளனர்” என்று சிவசேனா சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் கபில் சிபல் கூறினார்.

ஜனநாயகம் மீதான மோசடி: அபிஷேக் சிங்வி

“இரு குழுக்களும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கும்போது, ஏன் தாமதம் ஏற்பட வேண்டும்? இங்குள்ள ஒரு என்.சி.பி எம்.எல்.ஏ நாங்கள் பாஜக கூட்டணியில் சேருவோம் என்று கூறுகிறாரா?   இதைச் சொல்லும் ஒரு கடிதமாவது இருக்கிறதா? இது ஜனநாயகம் மீதான மோசடி” என்று காங்கிரஸ் மற்றும் என்.சி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் அபிஷேக் சிங்வி கூறினார்.

மோசமான மோசடி: கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் வாதம்

“அதிகாலை 5.27 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ய தேசிய அவசரநிலை எங்கே இருந்தது. மறுநாள் காலை 8 மணிக்கு முதல்வர் பதவிப்பிரமாணம் செய்யப்படுகிறார். இந்த இணைப்பில் 154 மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.-க்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பாஜகவுக்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருந்தால், 24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கேட்கப்பட வேண்டும்”என்று கபில் சிபல் கூறினார். குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டது மற்றும் அரசு அமைக்க கூறப்படும் அவசரத்தையும் அவர் குறிப்பிட்டார். இது வரலாற்றில் ஒருபோதும் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். “ஒரு என்.சி.பி எம்.எல்.ஏ. அஜித் பவாரிடம் பாஜகவுடன் செல்வதற்கு ஆதரித்ததாகக் ஆதரித்ததாக கூறினாரா? இது மிக மோசமான மோசடி.” என்று கபில் சிபல் கூறினார்.

சட்டமன்றத்தில் விரைவாக பெரும்பான்மையை நிரூபிக்கும் சோதனையை எதிர்கொள்ள பாஜக தயாராக இல்லை: அபிஷேக் சிங்வி

“இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சோதனை விவகாரத்தில் தோற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். எந்தஒரு விஷயமும் நடந்தபிறகுதான் நன்மையா தீமையா என்று தெரியும். நீங்கள் விரைவாக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கும் ஒரு சோதனையை எதிர்கொள்ள விரும்பவில்லை”என்று அபிஷேக் சிங்வி கூறினார்.

தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தது.

Bjp India Maharashtra All India Congress Ncp Shiv Sena Kapil Sibal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment