மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் அரசுக்கு எதிராக சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு, இன்று காலை 11.30 மணிக்கு சிறப்பு அமர்வு விசாரிக்க உள்ளது.
மகாராஷ்டிராவில் நடைபெற்று வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று அதிகாலை திடீரென வாபஸ் பெறப்பட்டது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக ஆளுநரால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் பொறுப்பேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்களும் தங்களுக்கு ஆதரவாக, இருப்பதாக தேவேந்திர பட்னாவிஸ் அளித்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ஒருசில அதிருப்தி எம்எல்ஏக்கள் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு அளித்து உள்ளார்களே தவிர, சுமார் 50 எம்எல்ஏக்கள் சரத்பவாருக்கு ஆதரவாகத் தான் இருக்கிறார்கள் என்று இப்போது தகவல் வெளியாகி உள்ளது. இன்று மும்பையில் சரத் பவார் தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் சுமார் 50 பேர் பங்கேற்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு
எனவே இன்று இரவோடு இரவாக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் தேவேந்திர பட்னாவிஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பதவிக்கு வந்துள்ள போப்டே, திருப்பதி, சென்று ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் பதிவாளரை சந்தித்து அவசர வழக்காக இதை ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மூன்று கட்சி வழக்கறிஞர்களும் கோரிக்கை வைத்தனர்.
இரவு சுமார் 8.30 மணிக்கு வெளியான தகவல்படி, இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்டது. பிறகு 1 மணி நேரத்திற்குள்ளாக வெளியான மற்றொரு தகவலில், நாளையே இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Maharashtra new government sena moves sc against bjps illegal usurpation of power
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதின் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி