Advertisment

நீங்கள் எங்களை கொல்லாத வரை, நாங்கள் வேலை செய்வதை உங்களால் தடுக்க முடியாது: மணீஷ் சிசோடியா

சிபிஐயின் நடவடிக்கையின் நோக்கம் ஊழலை எதிர்த்துப் போராடுவது அல்ல, மாறாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர்களை குறிவைப்பது என்று மணீஷ் சிசோடியா கூறினார்.

author-image
WebDesk
New Update
Manish Sisodia

Manish Sisodia

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபானக் கொள்கையை வெளியிட்டதில் ஊழல் செய்ததாக அவர் மீதும், பல கலால் துறை அதிகாரிகள் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ வெள்ளிக்கிழமையன்று அவரது வீட்டில் சோதனை நடத்தியது.

Advertisment

இதுகுறித்து சிசோடியா ஞாயிற்றுக்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், சிபிஐயின் நடவடிக்கையின் நோக்கம் ஊழலை எதிர்த்துப் போராடுவது அல்ல, மாறாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர்களை குறிவைப்பது என்று கூறினார்.

சிபிஐ விசாரணை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடந்து வருகிறது. உங்களை சிபிஐ கைது செய்யும் என்று நினைக்கிறீர்களா?

ஊழலைப் பற்றிப் போராடுவதோ, பேசுவதோ அவர்களின் நோக்கம் அல்ல என்பது தெளிவாகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் கல்வி அமைச்சராக இருப்பதால், மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட வேண்டும். இதுவே அவர்களின் நோக்கம். ரெய்டு நடத்தப்பட்ட விதத்தையும், கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் பாருங்கள். ரூ.8,000 கோடி, ரூ.10,000 கோடி, ரூ.1,000 கோடி என புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றியது, அதுவே மணீஷ் சிசோடியாவின் ஊழலுக்கு ஆதாரம் என்று சொல்கிறார்கள்.

இதுவரை சிபிஐ உடனான உங்கள் தொடர்பு என்ன?

அதிகாரிகள் என்னை விசாரணை செய்தனர். என் வீட்டை சோதனை செய்தனர்.  அவர்கள் எனது தொலைபேசி, கணினியை எடுத்துச் சென்றுவிட்டனர். என்னால் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது, அந்த எண்ணைப் பயன்படுத்த முடியாது. என்னிடம் இருந்த சில கோப்புகளையும் எடுத்துள்ளனர்.

விஜய் நாயரின் பங்கையும் சிபிஐ குறிப்பிடுகிறது. அவர் எந்த நிலையில் கட்சியுடன் தொடர்பு கொண்டார்?

இது விஜய் நாயர் பற்றியது அல்ல. கெஜ்ரிவாலுடன் தொடர்புடைய அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். சுகாதாரத்துறையில் நல்ல பணிகள் நடந்ததால், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை சிறையில் அடைத்தனர். கல்வியில் ஆற்றி வரும் பணிகளை மக்கள் பாராட்டி வருகின்றனர். டெல்லி அரசு கல்வித்துறையில் ஆற்றிய பணிகளைப் பற்றி தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் உலகமே படித்துக் கொண்டிருந்த அதே காலையில், அவர்கள் என் வீட்டில் சோதனை நடத்தினர். அவர்கள் விசாரிக்கட்டும். இவை அனைத்தும் இப்போது விசாரணைக்கு உட்பட்டவை.

கலால் வரிக் கொள்கையை நாட்டிலேயே சிறந்த கொள்கை, நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு லெப்டினன்ட் கவர்னர் இணக்கமற்ற பகுதிகள் குறித்த முடிவை மாற்றாமல் இருந்திருந்தால், அரசுக்கு 10,000 கோடி ரூபாய் கிடைத்திருக்கும் என்று கூறியுள்ளீர்கள். இந்தப் பிரச்சினைகளை நீங்கள் ஏன் முன்னரே பேசவில்லை?

யாரிடம் எழுப்பியிருக்க வேண்டும்?

நாங்கள் அதை அப்போதைய லெப்டினன்ட் கவர்னரிடம் முறையிட்டோம். அவர் ஒரு குழுவை அமைத்தார், அந்த குழு தீர்வை வழங்கும் என்று நாங்கள் நம்பினோம், முதலில், இவர்கள் அப்போதைய லெப்டினன்ட் கவர்னரை  சந்தித்து கடைசி நிமிடத்தில், அந்த மாற்றத்தை கொள்கையில் சேர்க்க வைத்தார்கள். இதுதான் சிக்கல். அந்த முடிவை ஏன் மாற்றினார்கள் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. எந்தச் செல்வாக்கின் கீழ் அவர் அதைச் செய்தார்? இந்தக் கேள்வியில் யாருக்கும் ஆர்வம் இல்லை என்று தெரிகிறது. மே மாதம் நிறைவேற்றப்பட்ட கொள்கையின் ஒரு பகுதியாக, இணக்கமற்ற பகுதிகளில் கடைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. இது எப்போதும் கொள்கையில் இருந்தபோது, ​​கடைசி நிமிடத்தில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது என்று ஏன் யாரும் கேட்கவில்லை?

சுகாதார அமைச்சர் காவலில் இருக்கிறார், உங்களை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறியுள்ளீர்கள். உங்கள் கீழ் 18 துறைகள் உள்ளன. இப்படி நடந்தால் அரசு எப்படி செயல்படும்?

பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களிடம் கட்டாயம் கேட்க வேண்டிய கேள்வி இது. கெஜ்ரிவால் அரசில் அடுத்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை யாருக்கு அனுப்பலாம் என்று நினைக்கும் மோடி ஜிக்கு என்ன ஆயிற்று? இதையெல்லாம் அவர் ஏன் நினைக்கிறார்? நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்னைகள் உள்ளன. கெஜ்ரிவாலின் எந்த அமைச்சர்களுக்கு அடுத்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை அனுப்ப வேண்டும் என்பதை முடிவு செய்வதே பிரதமரின் வேலை என்று மோடி ஜி நினைக்கிறார்.

நீங்கள் கவலைப்படுகிறீர்களா?

இது எனக்கான சவால். நீங்கள் எங்களை கொல்லாத வரை, நாங்கள் வேலை செய்வதை உங்களால் தடுக்க முடியாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment