Advertisment

பொருளாதார மந்தநிலையை சரி செய்வது எப்படி? - மன்மோகன் சிங் தரும் ஐந்து ஐடியா

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை வெளியே கொண்டு வருவதற்கு, வல்லுநர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் கருத்தை அரசாங்கம் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news live updates

தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தியது தான் காரணம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நம்புகிறார். தற்போதைய மந்தநிலையை மாற்றியமைக்க ஐந்து தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் அதே வேளையில், "தலையங்க மேலாண்மை" என்ற பழக்கத்திலிருந்து வெளியேறுமாறு சிங் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

"மோடி அரசாங்கம் தலையங்க நிர்வாகத்தின் பழக்கத்திலிருந்து வெளியே வர வேண்டும். ஏற்கனவே நிறைய நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. துறைசார் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதிலாக, முழு பொருளாதார கட்டமைப்பையும் ஒரே நேரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஐந்து சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு முன் முதல் படியாக, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மன்மோகன் சிங் கூறியுள்ளார். அரசாங்கம் இதை மறுத்துக் கொண்டே வாழ முடியாது. தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை வெளியே கொண்டு வருவதற்கு, வல்லுநர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் கருத்தை அரசாங்கம் திறந்த மனதுடன் கேட்க வேண்டும் என்றார்.

பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டுவருவதற்கான முதல் தீர்வு ஜிஎஸ்டியை "தர்க்கரீதியானதாக" மாற்ற வேண்டும். இது ஒரு குறுகிய காலத்திற்கு வருவாய் இழப்பை கூட ஏற்படுத்தும். இரண்டாவது தீர்வு, விவசாயத்தை புத்துயிர் பெற வைப்பதற்கும், கிராமப்புற நுகர்வு அதிகரிப்பதற்கும் புதிய வழிகளை உருவாக்க வேண்டும். 'விவசாய சந்தைகளை விடுவிப்பதன் மூலம் பணம் மக்கள் கைகளில் எட்டக்கூடும்' என்ற காங்கிரஸ் அறிக்கையையும் அவர் மேற்கோள் காட்டி, அதில் ‘உறுதியான மாற்று வழிகள்’ இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

மூன்றாவதாக, மூலதன உருவாக்கத்திற்கான அமைப்பில் பணப்புழக்கத்தை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்காவது நடவடிக்கை, ஜவுளி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மலிவு வீட்டுவசதி போன்ற முக்கிய துறைகளுக்கு புத்துயிர் அளிப்பதாகும். அதற்கு எளிதான கடன்கள் தேவைப்படும், குறிப்பாக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ), என்று அவர் கூறினார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் கட்டண யுத்தத்தின் காரணமாக வளர்ந்து வரும் ஏற்றுமதி வாய்ப்புகளை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கூறினார். இதுகுறித்த தனது ஐந்தாவது நடவடிக்கையை விரிவாகக் கூறுகையில், "அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரின் காரணமாக வெளிவரும் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், சுழற்சி மற்றும் கட்டமைப்பு சிக்கல்களுக்கான தீர்வுகள் அவசியம். 3-4 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை மீண்டும் பெற முடியும்."

1990 களில் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியாக அறியப்பட்ட மன்மோகன் சிங், இந்தியா மிகவும் கடுமையான பொருளாதார மந்தநிலையில் இருப்பதாக மேலும் கருத்து தெரிவித்தார். "கடந்த காலாண்டில் 5% வளர்ச்சி விகிதம் என்பது ஆறு ஆண்டுகளில் மிகக் குறைவு. பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியும் 15 ஆண்டுகளில் மிகக் குறைவு. பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன," என்றார்.

Manmohan Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment