Advertisment

மனைவியுடன் கட்டாய பாலுறவு குற்றமா? செப்.16 தீர்ப்பு

162 ஆண்டுகளாக தொடரும் சட்டப்பரிவு, மாற்றம் வருமா?

author-image
WebDesk
New Update
Marital rape SC to hear pleas arising out of Delhi HCs split verdict on September 16

உச்ச நீதிமன்றம்

மனைவியிடம் கணவன் கட்டாய பாலுறவு கொள்வதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் மே11ஆம் தேதி, நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புகள் அளித்தனர்.

அதில் நீதிபதி ஒருவர், “மனைவியுடன் சம்மதம் இல்லாத பாலுறவு தவறாகாது எனத் தீர்ப்பளித்தார்.

Advertisment

அதில், சட்டப் பிரிவு 375இன் படி ஒரு பெண்ணை ஏமாற்றுதல், கணவன் போல் வேடமிட்டு பாலுறவு உள்ளிட்டவை பாலியல் வன்புணர்வு தண்டனை வரையறைக்குள் உள்ளது. ஆனால் மனைவி சம்மதமின்றி கணவன் பாலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகாது எனத் தெரிவித்திருந்தார்.

மற்றொரு நீதிபதி இதற்கு ஆதரவளிக்கவில்லை. மேலும் 16 வயதுக்குள்பட்ட எந்தப் பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவித்திருந்தார்.

மனைவி அனுமதியில்லாமல் கணவர் கட்டாய பாலுறவு வைத்துக் கொள்ளலாம் என தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், நீதிபதி ராஜீவ் ஷக்தேர், திருமணத்தில் சம்மதமில்லாத பாலுறவின் விதிவிலக்கை ரத்து செய்ய விரும்பினார், மேலும் இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்து 162 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு திருமணமான பெண்ணின் நீதிக்கான கோரிக்கை கேட்கப்படாவிட்டால் அது துயரமானது என்றும் கூறினார்.

உயர் நீதிமன்றத்தின் அமர்வில் அங்கம் வகித்த நீதிபதி சி ஹரி சங்கர், பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் விதிவிலக்கு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், விதிவிலக்கின் பொருள் மற்றும் பிரிவு 375 (கற்பழிப்பு) ஆகியவற்றுடன் பகுத்தறிவுத் தொடர்பைக் கொண்ட ஒரு புரிந்துகொள்ளக்கூடிய வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார்.

உயர் நீதிமன்றத்தின் முன்னுள்ள மனுதாரர்கள், 375 ஐபிசி (கற்பழிப்பு) பிரிவின் கீழ் திருமண பலாத்கார விதிவிலக்கின் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து, கணவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான திருமணமான பெண்களுக்கு இது பாகுபாடு காட்டுவதாகக் கூறினர்.

மேலும் ஐபிசி 375இல் கொடுக்கப்பட்டுள்ள விதி விலக்கின் கீழ் மனைவியுடன் பாலியல் செயல்களில் ஈடுபடுவது கற்பழிப்பு அல்ல எனக் கூறுகிறது.

இதனை எதிர்த்து அகில இந்திய பெண்கள் ஜனநாயக சங்கம், அறக்கட்டளை மற்றும் தனி நபர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 16ஆம் தேதி தீர்ப்பு அளிக்கிறது.

அப்போது மேற்கூறிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வாய்ப்புகள் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment