Advertisment

ராஜஸ்தான்: பசுக்களை ஏற்றிவந்த தமிழக லாரிகளுக்கு தீ வைக்க முயற்சி! 50-பேர் மீது வழக்குப் பதிவு

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
cow

ராஜஸ்தானில் பசுக்களை ஏற்றிவந்த தமிழக லாரிகளுக்கு தீ வக்க முயற்சித்ததாக 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

நாடு முழுவதும் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், பல்வேறு மாநில நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் ஜெய்சால்மரில் இருந்து பசுக்களை வாங்கி, 5 லாரிகள் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வந்துகொண்டிருந்தனர். அந்த லாரிகயில் 50 பசுக்களும், 30 கன்றுகளும் இருத்ததாக கூறப்படுகிறது. அப்போது பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்டோர் தமிழக லாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். லாரி ஓட்டுநர்களை தாக்கிய அவர்கள் லாரிக்கு தீ வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும், இந்த தாக்குதல் குறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தும் போலீஸார் மெத்தனமாக நடந்து கொண்டனர்.

அப்போது, பசுக்கள் கொண்டுவந்த லாரியில் என்.ஓ.சி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் அங்கு வந்த கும்பல் லாரிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இது குறித்து பார்மர் மாவட்ட எஸ்பி ககங்தீப் சிங்லா கூறியதாவது: இந்த சம்பவத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலையை பசு பாதுபாதுகாப்பு கும்பல் அடைத்தது. மேலும், பசுக்களை ஏற்றிவந்த லாரிகளுக்கு தீவைக்க முயற்சி செய்ததோடு, கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இதனை தடுத்து நிறுத்தினர். லாரியை ஓட்டிவந்த வந்த டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். லாரியில் இருந்த பசுக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவைகளை மாற்று வழியில் தமிழகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்.

இந்த சம்பவத்தின் தீவிரம் அறியாமல், சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வந்த போலீஸ் அதிகாரிகள் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர்கள் அனைவரும் எந்த ஒரு குறிப்பிட்ட இயக்கத்தையும் சார்ந்தவர்கள் அல்ல.இந்த சம்பவம் தொடர்பாக 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக, அந்த மாநிலத்தில் 55-வயதான விவசாயி ஒருவர் பசுமாட்டை வாங்கிச் சென்றிருந்தபோது, இதே போன்ற தாக்குதல் சம்பவம் அரங்றேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment