கான்பூர் டோல்கேட்டில், காரிலிருந்து தாவும் குரங்கு, கேஷ் கவுண்டரிலிருந்து ரூ.5 ஆயிரம் பறித்து செல்லும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Advertisment
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் டோல்கேட்டில், வெள்ளை நிற கார் ஒன்று வந்து நிற்கிறது. அதிலிருந்து வெளியேறும் குரங்கு, டோல்கேட் பூத்தின் உள்சென்று, பணியாளரின் தலையில் ஏறி மற்றொரு புறமாக இறங்கி கேஷ் கவுண்டரில் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை அசால்டாக பறித்து செல்கிறது.
இது பழக்கப்பட்ட குரங்கா அல்லது தவறுதலாக வந்ததா என்பது குறித்து அந்த கார் உரிமையாளரிடம் கான்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.