Advertisment

கல்வி, சுகாதாரம், பெட்ரோலியம்... கொரோனா பாதித்த துறைகளுக்கு புதிய அமைச்சர்கள்

New faces at helm in pandemic-hit sectors: Health to Education, Labour to Petroleum: தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான கட்டாயத்துடன் புதிய அமைச்சர் தேசியவாத நலன்களையும் சமப்படுத்த வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்.

author-image
WebDesk
New Update
கல்வி, சுகாதாரம், பெட்ரோலியம்... கொரோனா பாதித்த துறைகளுக்கு புதிய அமைச்சர்கள்

கொரோனாவின் இரண்டாவது அலை வீழ்ச்சியடைந்த நிலையில், சுகாதாரம் மற்றும் கல்வி முதல் தொழிலாளர், சிவில் விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பெட்ரோலியம் வரை, தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட துறைகளை வளர்ப்பதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும் புதிய மற்றும் இளம் அமைச்சர்களை புதன்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி நியமித்துள்ளார்.

Advertisment

மத்திய அமைச்சரவையின் மிகப் பெரிய விரிவாக்கத்தில், அமெரிக்காவின் வார்ட்டானில் படித்த அஸ்வினி வைஷ்ணவாவுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறை, மன்சுக் மாண்டவியாவுக்கு சுகாதாரத்துறை, ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு சிவில் விமானப் போக்குவரத்துத்துறை, தர்மேந்திர பிரதானுக்கு, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, பூபேந்திர யாதவுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, அனுராக் தாக்கூருக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் கிரண் ரிஜிஜுவுக்கு சட்டத்துறை போன்ற முக்கிய பொறுப்புகளை பிரதமர் வழங்கியுள்ளார். இவர்கள் அனைவரும் 55 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ஹர்தீப் பூரியும் கேபினட் அமைச்சர் பதவிக்கு உயர்த்தப்பட்டு பெட்ரோலியம், வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்றுள்ளார். மாநிலங்களுக்கிடையே தனித்தனியாக சிதறி உள்ள கூட்டுறவுத்துறைக்கு திறமையான ஒருங்கிணைப்பு தேவைப்படுவதால், இதில் அமித் ஷாவின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகிவிட்டது.

ஆளுகை மற்றும் விநியோக பொறிமுறையில் மாற்றத்திற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள பிரதமர் மோடி, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே ஆகிய அமைச்சகங்களை 51 வயதான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வைஷ்ணாவிடம் ஒப்படைத்துள்ளார். இவர் ஐ.ஐ.டி. கான்பூர் மற்றும் அமெரிக்காவின் வார்ட்டான் வணிக பள்ளியில் படித்தவர். இந்த துறைகள் அனைத்தும் தினசரி அடிப்படையில் மனித வாழ்க்கையுடன் தொடர்புடையவை.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான கட்டாயத்துடன் புதிய அமைச்சர் தேசியவாத நலன்களையும் சமப்படுத்த வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்.

கொரோனா நிர்வாகத்தின் மீது மோடி அரசாங்கம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பின்னர், அவரது புகழ் வீழ்ச்சியடைந்து, அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்த நிலையில், பிரதமர் மோடி இப்போது தொற்றுநோய்க்கு எதிரான போரில் போராட துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சராக இருந்த மாண்டவியாவை நோக்கி திரும்பியுள்ளார்.

பிரதமரின் நம்பிக்கையை பெற்றுள்ள ஹர்தீப் பூரி, மதிப்புமிக்க மத்திய விஸ்டா திட்டத்தை தொடர்ந்து கையாள்வார், மேலும் முக்கிய பொருளாதார இலாகாவான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறையின் பொறுப்பையும் கவனிப்பார். உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரிப்பதன் காரணமாக அதிக உள்நாட்டு சில்லறை எரிபொருள் விலைகள், பணவீக்கத்தின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு அரசியல் பொருளாதாரத்திற்கு புதிய சவால்களை அளித்துள்ளன.

முக்கிய மாநிலங்களில் பாஜகவுக்கு நீண்டகாலமாக சிக்கல்களைத் தீர்ப்பவராகவும் மற்றும் ஒரு வியூகம் வகுப்பாளாராகவும் இருந்த பூபேந்தர் யாதவும் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துறையைத் தவிர பிற துறைகளை விடுவித்துள்ளார். கொரோனா பலரின் வாழ்வாதாரங்களை பறித்துள்ள நிலையில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அவர் பணியாற்ற வேண்டும்.

வெளிநாட்டில் இந்தியாவின் கருத்தை சரிசெய்தல் மற்றும் ஒரு புதிய கருத்தை அமைப்பது போன்ற கடினமான வேலை இப்போது அனுராக் தாக்கூரிடம் உள்ளது. மோடி மற்றும் அமித் ஷாவின் நம்பிக்கையைப் பெற்ற 46 வயதான தாகூர் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒரு திறமையான அரசாங்கத்தின் இமேஜை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

49 வயதான ரிஜிஜூவுக்கு சட்ட அமைச்சராக ஒரு சவாலான பணியும் உள்ளது, ஏனெனில் அரசாங்கம் நீதித்துறையுடன் நல்லுறவைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை, குறிப்பாக புதிய நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக. அண்மையில், பல்வேறு உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றங்களில் இருந்து உபா மற்றும் தேசத்துரோக சட்டங்களின் பயன்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

நீண்டகால ஊரடங்குகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவுவதால் கிராமப்புற பொருளாதாரம் குலுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், , கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கிரிராஜ் சிங்கின் செயல்திறன் உன்னிப்பாக கவனிக்கப்படும். கிரிராஜ் சிங்கைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரதமரின் முடிவு அவரது முந்தைய அமைச்சகங்களில் அவர் செய்த உன்னதமான பணிகளுக்கான ஒப்புதலாகக் கருதப்படுகிறது.

செவ்வாயன்று, தனது அமைச்சரவையை மீட்டமைத்து விரிவுபடுத்தும் போது, ​​பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களிடமிருந்து சில பொறுப்புகளை எடுத்துக் கொண்டார். ஹர்தீப் பூரியிடம் பெட்ரோலியத்தை இழந்த தர்மேந்திர பிரதனுக்கு கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் இலாகாக்கள் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பியூஸ் கோயல் ரயில்வேயில் இருந்து அகற்றப்பட்டுள்ளார், ஆனால் வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் ஆகியவற்றை தொடர்ந்து வைத்திருக்கிறார். அவருக்கு ஜவுளி அமைச்சகம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மிருதி இரானி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக உள்ளார். எவ்வாறாயினும், இந்த மறுசீரமைப்பு மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகத்தை பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரியிடமிருந்து பறித்துவிட்டது, இப்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மட்டுமே நிதின் கட்கரியிடம் உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment