Advertisment

தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்க வேண்டும்: கே.என்.சிங்கிடம் ஓ.பி.எஸ் கோரிக்கை

தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்குமாறு நிதிக்குழு தலைவர் கே.என்.சிங்கிடம் ஓபிஎஸ் கோரிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்க வேண்டும்: கே.என்.சிங்கிடம் ஓ.பி.எஸ் கோரிக்கை

தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்குமாறு நிதிக்குழு தலைவர் கே.என்.சிங்கிடம், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

துணை முதல்வரும், தமிழக நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். அவருடன் நிதித் துறை செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அங்கு நிதிக்குழு தலைவா் கே.என.சிங்கை சந்தித்து அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆலோசனைக்கு பின்பு செய்தியாளா்களை சந்தித்த ஓ.பன்னீா் செல்வம், "மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை தமிழக அரசு முறையாக பின்பற்றி அதில் வெற்றி கண்டுள்ளது. ஆனால் தற்போது மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழகம் வெற்றி கண்டுள்ளதற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். மேலும் தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் மழை, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடா்பாடுகளை சந்திக்கின்றது. இதன் மூலமாக தமிழகத்தில் நிதிநிலை பற்றாகுறை ஏற்படுகிறது.

இது போன்ற காலங்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்க வேண்டும் என்று கோாிக்கை வைத்துள்ளோம். 15வது நிதி குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு 40,000 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தோம். நமது கோாிக்கைகளை பரிசீலித்து உாிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் உறுதி அளித்துள்ளார்" என ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment