மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் டில்லியில் நேரில் சந்தித்து பேசினார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று முன் தினம் டில்லிக்கு சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது நிதித்துறை அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர். தமிழகத்துக்கு வேண்டிய நிதி ஆதாரத்தை வழங்குமாறு அப்போது ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியதாகவும், அதற்கான கோரிக்கை மனுக்களையும் அவர் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு, இதேநாளில் (ஜூலை 23ம் தேதி), அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.