Advertisment

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த திமுக அலுவலக திறப்பு நிகழ்ச்சி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தைத் திறந்து வைத்தனர்.

author-image
WebDesk
New Update
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த திமுக அலுவலக திறப்பு நிகழ்ச்சி

சனிக்கிழமையன்று டெல்லியில் நடைபெற்ற தி.மு.க அலுவலகம் திறப்பு விழா, எதிர்க்கட்சியில் அமளி நிலவிய நேரத்திலும் பல பாஜக அல்லாத தலைவர்களை ஒன்றிணைத்தது. அவை காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் பாஜக அரசை எதிர்த்து போராட வேண்டும் என்பதை அறிவுறுத்தின. அதில், காங்கிரஸ் மட்டும் பெரியளவில் விருப்பம் காட்டாமல் தனித்து நின்றது.

Advertisment

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தைத் திறந்து வைத்தனர்.

திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை சோனியா திறந்து வைத்தார். தி.மு.க.வும் காங்கிரஸும், குறிப்பாக கருணாநிதி குடும்பமும், காந்தியடிகளும் சிறப்புப் பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதே சமயம், பாஜகவின் தேர்தல் மேலாதிக்கம், ஸ்டாலினைக் கூட அகில இந்திய அளவில் கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்பை காங்கிரஸ் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பரிந்துரைக்க செய்கிறது.

இந்தியாவைக் காப்பாற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, பல பிராந்தியக் கட்சிகளிடமிருந்து இத்தகைய அறிவுரைகள் வந்துள்ளன. இருப்பினும், பல எதிர்க்கட்சிகள் தற்போது காங்கிரசை தலைமைப் பொறுப்பேற்கச் சொல்லவில்லை.

திராவிடக் கட்சி மட்டுமே தற்போது காங்கிரஸின் ஒரே உறுதியான கூட்டாளியாக இருப்பதால், திமுக நிகழ்ச்சியில் சோனியாவின் வருகை குறிப்பிடத்தக்கது. சில கட்சிகள் காங்கிரஸை விட்டு விலகி இருந்தாலும், அடுத்த வாரம் முடிவடையும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டத்தின் போது, நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைக்க எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட காங்கிரஸ் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களைப் போலல்லாமல், இம்முறை டெல்லி சென்ற போது ஸ்டாலின் சோனியாவை அழைக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நேரத்தை செலவிட்டார். அவருடன் டெல்லி அரசுப் பள்ளி மற்றும் மொஹல்லா கிளினிக்கிற்குச் சென்று பார்வையிட்டார்.

காங்கிரஸ் தனது கட்சியை ஒழுங்கமைக்கவும், மற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் நிகழ்வை மேற்கொள்ளவும் தயங்குவதால் பெரும்பாலான தலைவர்கள் குழப்பமடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் எழுதிய கடிதத்தில், பாஜகவை எதிர்த்துப் போராட ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மம்தா கடிதம் அனுப்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஸ்டாலினை பாஜக அல்லாத முதல்வர்களில் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் என அழைத்த யெச்சூரி, கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் இந்திய மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டுமாறு அவரிடம் வலியுறுத்தினார்.

மேற்கு வங்கத்தில் CPM இன் பரம எதிரியான பானர்ஜி அழைப்பு விடுத்த கூட்டத்தை யெச்சூரி வரவேற்க மாட்டார் என்றாலும், அவர் காங்கிரஸிடம் தலைமை ஏற்குமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை என்பது சுவாரஸ்யமானது.

இந்த வார தொடக்கத்தில், சிவசேனாவும் UPA வை மறுசீரமைக்க அழைப்பு விடுத்தது. அப்போது, கூட்டணிக்கு புதிய தலைவர் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

அதற்கு என்சிபி தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, ஸ்டாலின், பானர்ஜி, கெஜ்ரிவால், டிஆர்எஸ் தலைவர், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் போன்ற தலைவர்கள் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் திறன் கொண்டவர்கள் என்று ல் சாம்னாவின் தலையங்கம் பரிந்துரைத்தது.

சனிக்கிழமையன்று, திமுக நிகழ்ச்சியில் பல தலைவர்கள் கலந்து கொண்டாலும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கான பேச்சுகளோ, கூட்டாக பேசுவதோ நடைபெறவில்லை. நிகழ்ச்சியில் மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான ப சிதம்பரம், ம.தி.மு.க., தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ, தெலுங்கு தேசம் கட்சியின் கனகமேடலா ரவீந்திர குமார், ஜெயதேவ் கல்லா, டிஎம்சியின் மஹுவா மொய்த்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment