Advertisment

இண்டிகோ விமான சம்பவம்; பயணிகள் பாதுகாப்பில் சமரசமா? தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

பா.ஜ.க யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவரும், எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு முன்பு அவசரகால வெளியேறும் கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது

author-image
WebDesk
New Update
இண்டிகோ விமான சம்பவம்; பயணிகள் பாதுகாப்பில் சமரசமா? தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி தேஜஸ்வி சூர்யா, இண்டிகோ விமானத்தின் அவசர வழிக் கதவை திறக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Advertisment

பா.ஜ.க யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவரும், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு முன்பு அவசரகால வெளியேறும் கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: விமான கதவு திறந்த பிரச்னையில் மன்னிப்பு கேட்ட தேஜஸ்வி: மத்திய அமைச்சர் பேட்டி

பா.ஜ.க வி.ஐ.பி.,களை ‘பிராட்கள்’ (மோசமான, எரிச்சலூட்டும் நடத்தையுள்ள குழந்தை) என்று அழைத்த காங்கிரஸ் எம்.பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்வீட் செய்ததாவது: “பா.ஜ.க வி.ஐ.பி பிராட்ஸ்! விமான நிறுவனத்திற்கு புகார் செய்ய எப்படி தைரியம் வந்தது? பா.ஜ.க அதிகார கும்பலுக்கு இது வழக்கமா? இது பயணிகளின் பாதுகாப்பை சமரசம் செய்ததா? ஓகோ! பா.ஜ.க.,வின் வி.ஐ.பி.,கள் குறித்து உங்களால் கேள்வி கேட்க முடியாது!” என்று பதிவிட்டுள்ளார்.

தேஜஸ்வி சூர்யா மற்றும் இண்டிகோ ஜெட் விமானத்தின் படத்தைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி, பா.ஜ.க எம்.பி.,யின் பெயரைக் குறிப்பிடாமல், ட்வீட் செய்துள்ளார், “அரசியல் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க யாரோ ஒருவர் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. இது இப்படி நடக்காது. அரசியலில் வெற்றி என்பது பணிவு மற்றும் விடாமுயற்சியின் காரணியாகும், நிலையற்ற தன்மை மற்றும் ஆணவம் அல்ல,” என்று பதிவிட்டுள்ளார்.

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி ட்வீட் செய்துள்ளார். “இண்டிகோ இந்த சம்பவத்தை டி.ஜி.சி.ஏ.,விடம் தெரிவித்ததா? இல்லையென்றால்? இந்த சம்பவத்தை தானாக முன்னோக்கி எடுத்துக்கொள்வதா? விமானம் ஓடுபாதையில் டாக்ஸி செய்து கொண்டிருந்ததை விட, புறப்பட்டவுடன் இப்படி நடந்தால், மன்னிப்பு கேட்டால் போதுமானதா?” என்று பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், பா.ஜ.க எம்.பி.,க்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அவர் ட்வீட் செய்ததாவது: ”ஒரு குறும்புக்காரன் விமானத்தில் அவசரகால வெளியேறும் கதவைத் திறந்ததால், விமானம் 3 மணி நேரம் தாமதமானது, மக்களை ஆபத்தில் ஆழ்த்திய மற்றும் சிரமத்திற்கு ஆளாக்கியவரின் பெயர் அதிகாரத்தின் மமதையால் ஒரு மாதமாக வெளியிடப்படவில்லை - அந்த எம்.பி. தினமும் வெறுப்பை பரப்புகிறார், இந்த கெட்டுப்போன தேஜஸ்வி சூர்யாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்.”

தமிழக தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா, தேஜஸ்வி சூர்யாவை விமர்சித்து கூறியதாவது: விமானத்தில் என்ன நடந்தது என்பதை நேரில் பார்த்த பயணி ஒருவர், கதவை திறந்ததும் பயணிகள் பீதியடைந்ததாக டி.என்.எம் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். "அதிர்ஷ்டவசமாக விமானம் தரையில் இருக்கும் போது அது நடந்தது." இப்படி ஏதாவது நடுவானில் நடந்திருந்தால் மிகவும் மோசமாக இருந்திருக்கும்!'' என்று பதிவிட்டுள்ளார்.

சில ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு செவ்வாயன்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தேஜஸ்வி சூர்யா என்று செய்தி ஊடக அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், இண்டிகோ விமான நிறுவனம் தனது அறிக்கையில் யாரையும் குறிப்பிடவில்லை.

“டிசம்பர் 10, 2022 அன்று சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு 6E 7339 விமானத்தில் பயணித்த ஒரு பயணி, போர்டிங் செயல்பாட்டின் போது தற்செயலாக அவசரகால வழியைத் திறந்தார். இந்த செயலுக்கு பயணி உடனடியாக மன்னிப்பு கேட்டார். SOP களின் படி, சம்பவம் பதிவு செய்யப்பட்டது மற்றும் விமானம் கட்டாய பொறியியல் சோதனைகளுக்கு உட்பட்டது, இது விமானம் புறப்படுவதில் தாமதத்திற்கு வழிவகுத்தது,” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், பா.ஜ.க.,வின் தமிழகத் தலைவர் அண்ணாமலையுடன் பயணம் செய்தவர் தேஜஸ்வி சூர்யாதான் என்று விமான நிறுவன வட்டாரங்கள் உறுதி செய்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment