Advertisment

ஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி ஆய்வில் காட்டிய இரட்டை நோய் எதிர்ப்பு

அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி உடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கி வரும் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆரம்பகால மனித பரிசோதனையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, oxford coronavirus vaccine, oxford covid 19 vaccine, coronavirus vaccine, coronavirus vaccine update, covid-19 vaccine, கொரோனா வைரஸ், ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆய்வு, அஸ்ட்ராஜெனேகா கோவிட் தடுப்பூசி ஆய்வு, இரட்டை நோய் எதிர்ப்பு, covid-19 vaccine, coronavirus update, covid 19 vaccine update today, covid 19 vaccine today update, university of oxford coronavirus vaccine, oxford university covid 19 vaccine, oxford university covid 19 vaccine news, oxford university covid 19 vaccine update

அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி உடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கி வரும் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆரம்பகால மனித பரிசோதனையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது. அது நோய்க்கிருமியைத் வீழ்த்துவதில் தொடர்ந்து அதிக பங்குகளை வகிப்பது முன்னேற்றத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.

Advertisment

இந்த தடுப்பூசி பாதுகாப்பை நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகள் மற்றும் வைரஸை குறிவைக்கும் நோய் எதிர்ப்பு டி-செல்கள் இரண்டையும் அதிகரித்ததாக ஆய்வு அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனுடைய முடிவுகள் தி லான்செட் மருத்துவ இதழில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

அஸ்ட்ராஜெனெகா பங்குகள் லண்டனில் 10% வரை உயர்ந்துள்ளன. ஆனால், முடிவுகள் ஆரம்பநிலையிலானது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்ததால் 0.6% அதிகம்வர்த்தகம் செய்வதற்கான அதிக லாபத்தை விட்டுவிட்டனர். தடுப்பூசி ஏற்கனவே மேம்பட்ட சோதனைகளில் இருந்த நிலையில், கடந்த வாரம் அறிக்கைகள் பங்குகளை உயர்த்திய பின்னர், நேர்மறையான முடிவு பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

“ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குவது மட்டுமல்லாமல், டி-செல்கள் பற்றியும் நல்ல நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் காண்கிறோம்” என்று ஆக்ஸ்போர்டின் ஜென்னர் நிறுவனத்தின் தலைவர் அட்ரியன் ஹில் ஒரு பேட்டியில் கூறினார். மேலும் அவர், “நாங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பின் இரு புறங்களையும் தூண்டுகிறோம்” என்று கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, உலகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்களை கொன்று பொருளாதார கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த தொற்றுநோயை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதால் ஆய்வின் முடிவுகளை அரசுகளால் உன்னிப்பாக ஆராயப்படும்.

மற்றொரு முன்னணி கோவிட் தடுப்பூசி ஆய்வு நிறுவனமான மாடர்னா நிறுவனம் கடந்த வாரம் ஒரு ஆரம்ப கட்ட சோதனையின் முடிவுகளை வெளியிட்டது. அதனுடைய தடுப்பூசியும் வைரஸை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளின் அளவை உயர்த்தியுள்ளதைக் காட்டியது.

முக்கிய படி

நடுநிலையான ஆன்டிபாடிகளின் உற்பத்தியைத் தூண்டுவது தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கவில்லை என்றாலும், இது பரிசோதனையின் முக்கியமான ஆரம்ப கட்டமாகக் கருதப்படுகிறது. விலங்குகளில் சோதனையின் முடிவுகள் ஏற்கனவே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டியது.

உலகெங்கிலும், சுமார் 160 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஆய்வு பல்வேறு வளர்ச்சி கட்டங்களில் உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அருகே உள்ளது. அதுவும் ஏற்கெனவே இறுதி கட்ட சோதனைகளைத் தொடங்கியுள்ளது. செப்டம்பர் மாதத்திலேயே யு.கே.க்கு அளவை வழங்கத் தொடங்கலாம் என்று அஸ்ட்ராசெனெகா கூறியுள்ளது.

“மற்ற நிறுவனங்களும் தடுப்பூசிகளை வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், உலகம் விரைவில் அதிக தடுப்பூசிகளை அடையும்” என்று ஹில் கூறினார். “நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இரு புறமும் நன்கு தூண்டப்படுவதால் ஒரு நன்மை இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்.” என்று ஹில் கூறினார்.

அமெரிக்கா 1.2 பில்லியன் டாலர் ஆய்வின் வளர்ச்சிக்கு உறுதியளித்தபோது பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிருவனம் ஊக்கத்தைப் பெற்றது. அஸ்ட்ராவுடனான அதன் ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா அக்டோபர் மாதத்திலேயே தடுப்பூசிகளைப் பெறத் தொடங்கலாம்.

இங்கிலாந்தும் தடுப்பூசிக்காக ஒரு விநியோக ஒப்பந்தத்தையும் செய்துள்ளது. ஆனால், திங்களன்று அது மற்ற மருந்து தயாரிப்பாளர்களின் சோதனை தடுப்பூசிகளை அதன் சவால்களைக் கட்டுப்படுத்தவும், அதன் 66 மில்லியன் மக்கள்தொகைக்கு போதுமான அளவில் தடுப்பூசி பெறுவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ஃபைசர் நிறுவனம் பயோன்டெக் எஸ்இ மற்றும் வால்னேவா எஸ்இ ஆகியவற்றுடனும் அரசாங்கம் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.

கோவிட் போராட்டம்

கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் அணுகுமுறைகளின் வரிசையை நம்பியுள்ளன. ஆக்ஸ்போர்டு குழு ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது பாதிப்பில்லாத வைரஸைப் பயன்படுத்தி நோய்க்கிருமிகளின் மரபணுப் பொருள்களை உயிரணுக்களில் கொண்டு சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. முன்மொழியப்பட்ட தடுப்பூசி ஒரு பொதுவான குளிர் வைரஸின் பலவீனமான பதிப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மனிதர்களில் வளர முடியாமல் மரபணு மாற்றப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு SARS-CoV-2 வைரஸின் மேற்பரப்பு ஸ்பைக் புரதத்திலிருந்து மரபணுப் பொருளை செருகியுள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மீண்டும் போராட செய்வதற்கான ஒரு வழியாகும். இந்த தளம் ஆன்டிபாடிகள் மற்றும் அதிக அளவிலான டி-செல் கொல்லிகள் இரண்டையும் தூண்டுகிறது. இது ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்கள் என்பதால் நோய் திர்ப்பு அமைப்பை நோய்த்தொற்றை அழிக்க உதவுகிறது.

“நாங்கள் மிகவும் ஊக்குவிக்கப்படுகிறோம்” என்று ஹில் கூறினார். தடுப்பூசி வேலை செய்கிறது என்பதை சோதனை நிரூபிக்கவில்லை என்றாலும், “கடந்த வாரத்தை விட இந்த வாரம் வேலை செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று ஹில் கூறினார்.

மாடர்னாவின் ஆரம்ப முடிவுகள் 45 நோயாளிகளின் முதல் குழுவிலிருந்து வந்தன. மாடர்னாவின் பங்குகள் அமெரிக்க வர்த்தகத்தில் முடிவடைந்த பின்னர், தடுப்பூசி பெற்ற நோயாளிகளிடையே அதிக பக்கவிளைவுகள் இருந்தபோதிலும் நோயாளிகள் இடையே நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதில் ஒரு முக்கியமனா நன்மை இருக்கலாம்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ஒரு டோஸுக்குப் பிறகு நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளை வெளிப்படுத்தியது என்று ஹில் கூறினார். நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக உயர்த்துவதில் இது ஒரு முக்கியமான நன்மையாக இருக்கலாம்.

மேலும் அவர், “நான் அதை மாடர்னா தரவுகளில் தெளிவாகப் படிக்கவில்லை” என்று அவர் கூறினார். பாதுகாப்பான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளைக் காண அவர்களுக்கு இரண்டு அளவு தேவை என்று நான் நினைக்கிறேன்.” என்று ஹில் கூறினார்.

இந்த மாதத்தில் ஒரு பெரிய சோதனை தொடங்கப்பட உள்ளது. அது மாடர்னாவின் தடுப்பூசியை இரண்டு ஷாட் விதிமுறைகளில் சோதிக்க உள்ளது. அஸ்ட்ரா இரண்டு தடுப்பூசி விதிமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்” என்று ஹில் கூறினார்.

“இது அதிக அளவு ஆன்டிபாடிகளை அளிக்கிறது. இது முன்னோக்கிச் செல்வது முக்கியம்” என்று ஹில் தெரிவித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Oxford University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment