Advertisment

சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துள்ளது; புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு குறித்து ப. சிதம்பரம் விமர்சனம்

டெல்லி ஜஹாங்கிர்புரியில் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டதையும் மத்தியப் பிரதேசத்தில் கார்கோனில் இடிக்கப்பட்டதையும் குறித்து ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துள்ளது; புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு குறித்து ப. சிதம்பரம் விமர்சனம்

டெல்லி ஜஹாங்கிர்புரியில் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டதையும் மத்தியப் பிரதேசத்தில் கார்கோனில் இடிக்கப்பட்டதையும் குறித்து ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆக்கிரமிப்புகளை புல்டோசர் மூலம் இடிப்பதை பாஜக தலைவர்கள் நியாப்படுத்துவது சட்டத்தின் முகம் காற்றில் பறக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisment

சமீபத்தில், புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டதன் மூலம் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளதை பிரதிபலிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் இந்த புதிய முறை முஸ்லிம் சமூகம் மற்றும் ஏழைகளைக் குறிவைத்து செயல்படுத்தப்படுகிறது என்று கருதுவது நியாயமானது என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

ப.சிதம்பரம் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், சிதம்பரம் ஜஹாங்கிர்புரியில் வீடுகள் இடிப்புகள் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதி வீடுகள் இடிப்புகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். புல்டோசர் மூலம் இடிப்பதை பாஜக தலைவர்கள் நியாயப்படுத்துவது சட்டம் காற்றில் பறக்கிறது என்று கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர்களான பிருந்தா காரத் மற்றும் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் ஜஹாங்கிர்புரி இடிப்புப் பகுதிக்கு முதலில் வருகை தர காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒரு நாள் தாமதமாக வந்ததாக குறிப்பிட்ட சில தரப்பினரின் விமர்சனத்திற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “யார் எப்போது வந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. இடிப்புகள் மேற்கொள்ளப்பட்ட சிறிது நேரத்திலேயே அப்பகுதிக்கு காங்கிரஸ் பிரதிநிதிகள் சென்றதாக அறிகிறேன். விவரிக்க முடியாத தாமதம் ஏற்பட்டிருந்தால், நான் வருந்துகிறேன்.” என்று கூறினார்.

முஸ்லிம்களை திருப்திபடுத்துகிறது காங்கிரஸ் என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பயந்து காங்கிரஸ் கால தாமதமாக வந்ததா என்றா கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம், ​​ “சட்டப்படி முழுமையான அப்பட்டமான மீறல் எனது கவலையாக இருக்கும் போது நீங்கள் ஏன் இந்த பிரச்சினையில் மதத்தை கொண்டு வருகிறீர்கள்” என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மென்மையான இந்துத்துவா குற்றச்சாட்டை எதிர்கொள்ள மதச்சார்பின்மையை இன்னும் தீவிரமாக முன்வைக்க வேண்டுமா என்று கேட்டதற்கு, மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்றும் அது காங்கிரஸின் அடிப்படையான மதிப்பு என்றும் ப. சிதம்பரம் கூறினார். “மதச்சார்பற்ற நிலையில் இருப்பது மட்டும் போதாது. ஒவ்வொருவரும் மதச்சார்பின்மை மொழியைப் பேச வேண்டும், மதச்சார்பின்மை மீறப்படும்போது எதிர்ப்பை எழுப்ப வேண்டும். மதச்சார்பின்மையிலிருந்து விலகுவதை என்னால் ஏற்க முடியாது. நேரான பாதையில் இருந்து விலகிச் செல்வதால் எதையும் பெற முடியாது” என்று ப. சிதம்பரம் கூறினார்.

டெல்லியின் ஜஹாங்கிர்புரி மற்றும் மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் நடந்த நிகழ்வுகளின் பின்னணியில், ‘புல்டோசர் அரசியல்’ என்ற வார்த்தை அரசியல் அகராதியில் முக்கிய வார்த்தையாக மாறியுள்ளது குறித்து ப. சிதம்பரம், புல்டோசர் மூலம் இடிப்புகளை பாஜக தலைவர்கள் நியாயப்படுத்துவது சட்டத்தின் முகம் காற்றில் பறக்கிறது என்று கூறினார்.

“ஒவ்வொரு நகராட்சி அல்லது பஞ்சாயத்து சட்டத்திலும், ஆக்கிரமிப்புகள்/சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது, ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவது, ஆட்சேபனைகளை தெரிவிக்க அவகாசம் அளிப்பது, நியாயமான உத்தரவு பிறப்பித்தல், மேல்முறையீடு செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது, இடிப்பதற்கு பணியாளர்களை அனுப்புவதற்கு முன் மற்றொரு அறிவிப்பை வெளியிடுகிறது” என்பது நடைமுறையாக உள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.

“சமீபத்திய இடிப்புகளில் ஏதேனும் இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதா? அதனால்தான் சட்டம் ஒழுங்கு இல்லை, சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. யாருடைய வீடு அல்லது கடை இடிக்கப்பட்டது என்பது பொருளல்ல” என்று அவர் வலியுறுத்தினார்.

இதுபோன்ற செயல்களின் மூலம் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுவதாக சில தரப்பினரின் அவதானிப்புகள் என்பது, ​​பொது களத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில், இடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் பெரும்பாலானவை முஸ்லிம்கள் மற்றும் ஏழை மக்களுடையது என்று தெரிகிறது.

“அந்த கருத்து தவறாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான தரவுகளை வெளியிட வேண்டும். இந்த கருத்து நிலைத்திருக்கும் வரை, முரண்படாத வரை, ஆக்கிரமிப்புகள்/சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் இந்த புதிய முறை முஸ்லிம் சமூகம் மற்றும் ஏழைகளை இலக்காகக் கொண்டது என்று கருதுவது நியாயமானது” என்று சிதம்பரம் கூறினார்.

அங்கே உள்ள பல வீடுகள் சட்டவிரோத கட்டுமானங்களில் பணக்காரர்கள் வாழும் முழு காலனிகள் உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தை மதிக்காமல் புல்டோசர் மூலம் இடிப்புகளை நியாயப்படுத்துபவர்கள் எதிர்காலத்தில் விழுவதற்கு குழி தோண்டுகிறார்கள் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கூறினார்.

“நான் மதச்சார்பின்மை பற்றிய கேள்வியை எழுப்பவில்லை, நான் வெறுமனே கேட்கிறேன், ‘இதுபோன்ற இடிப்புகளை சட்டம் அனுமதிக்கிறதா?’ என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றால், இத்தகைய இடிப்புகளைக் கண்டிக்க இது போதுமானது. நீங்கள் சட்டத்தை புறக்கணித்தால், நீங்கள் நெருக்கடி நிலையில் அப்படி செய்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.

ஜஹாங்கிர்புரி இடிப்பு பற்றிய விவாதத்தில், ஆம் ஆத்மி கட்சி பக்களாதேஷ் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களை கொண்டு வருவது குறித்த கேள்விக்கு, ஆம் ஆத்மி பாஜகவைப் போல சாகசமாக மாறி வருகிறது என்று ப. சிதம்பரம் கூறினார். “அரசியல் கட்சிகள் எரியும் பிரச்னையை ஒரு அரசியல் பலனைப் பெறுவதற்கான வாய்ப்பாகக் கருதும் போக்கைக் கண்டு நான் கவலைப்படுகிறேன். அது இப்போது இருக்கும் பிரச்னைக்கு எந்த சம்பந்தமும் இல்லை” என்று ப. சிதம்பரம் கூறினார்.

பங்களாதேஷ் முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பிரச்சினைகளுக்கும் புல்டோசர் மூலம் வீடுகள், கடைகள் இடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ப. சிதம்பரம் வலியுறுத்தினார். ஜஹாங்கிர்புரியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகாமையில் இருந்த பல கான்கிரீட் மற்றும் தற்காலிக கட்டமைப்புகள், கடந்த வாரம் பாஜக ஆளும் வடக்கு எம்.சி.டி-யின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளன. வடமேற்கு டெல்லி சுற்றுப்புறங்கள் வகுப்புவாத வன்முறையால் உலுக்கிய சில நாட்களுக்குப் பிறகு அகற்றப்பட்டன.

இந்த இடிப்புக்கு எதிராக ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதையடுத்து, இடிப்புகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் இரண்டு முறை தலையிட வேண்டியிருந்தது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரிக்கு காங்கிரஸ் தலைவர்களின் பிரதிநிதிகள் குழு வியாழக்கிழமை வந்தனர். ஆனால் ஒரு நாள் முன்பு வடக்கு எம்.சி.டி அத்துமீறல் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட்ட பகுதிக்கு செல்லவிடாமல் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில், ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமி ஊர்வலத்தின் போது வெடித்த கல் வீச்சு மற்றும் பிற வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சட்டவிரோத சொத்துக்களுக்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு கார்கோனில் ஒரு இயக்கத்தைத் தொடங்கியது.

வன்முறையைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகளால் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாகவும், சில சந்தர்ப்பங்களில் உரிய நடைமுறையின்றி வீடுகள் இடிக்கப்படுவதாகவும் மாநிலத்தில் உள்ள பல முஸ்லிம் மதத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Delhi Congress P Chidambaram 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment