பெட்ரோல் டீசல் விலை இன்று 4வது நாளாக வரலாறு காணாத உச்சத்தை அடிந்துள்ளது. டெல்லி முதல் சென்னை வரை உயர்ந்துள்ள விலையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு:
நேற்று:
கடந்த 4 நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்றைய விலை நிலவரம்படி, பெட்ரோல் விலை 81.35 ரூபாயாகவும், டீசல் விலை 73.88 ரூபாயாகவும் இருந்தது.
இன்று:
இந்நிலையில், இன்றைய சென்னை விலை நிலவரம்படி பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து 81.58 ரூபாயாக உள்ளது. டீசல் விலை 30 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.74.18ஆகவும் உள்ளது.
பிற மாநிலங்கள்:
டெல்லி : பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து 78.52 ரூபாயாகவும், டீசல் 28 காசுகள் உயர்ந்து 70.21 ரூபாயாகவும் உள்ளது.
மும்பை : பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து 85.93 ரூபாயாகவும், டீசல் 30 காசுகள் உயர்ந்து 74.54 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இந்த உயர்வால் மக்கள் இயல்பு வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், வணிக ரீதியான வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.