Advertisment

ஃபைசர், மார்டனா தடுப்பூசிகளுக்கு குவிந்துள்ள ஆர்டர்கள்; காத்திருக்க வேண்டிய நிலையில் இந்தியா

Pfizer, Moderna order books full, India looks at long, uncertain wait: தடுப்பூசிகளின் பற்றாக்குறை நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைக் குறைத்துவிட்டது அல்லது நிறுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசி போடத் தவறியதுதான், கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும் விதித்த ஊரடங்குகள் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததற்கான காரணம்

author-image
WebDesk
New Update
ஃபைசர், மார்டனா தடுப்பூசிகளுக்கு குவிந்துள்ள ஆர்டர்கள்; காத்திருக்க வேண்டிய நிலையில் இந்தியா

பிப்ரவரி 3 அன்று, இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரின் கீழ் உள்ள நிபுணர் அமைப்பு ஃபைசரின் எம்ஆர்என்ஏ தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை பரிந்துரைக்க மறுத்துவிட்டது. இதனால், அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் அதன் விண்ணப்பத்தை வாபஸ் பெற்றது.

Advertisment

இரண்டாவது அலையால் பாதிப்பு அதிகரித்ததும், இந்தியா அதன் தடுப்பூசி தேவைகளுக்கு இப்போதுள்ள தடுப்பூசி அளவுகள் மிகக் குறைவு என்பது தெளிவாகத் தெரிந்ததும், ஏப்ரல் 13 அன்று, அரசாங்கம் ஒரு யு-டர்ன் அடித்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் ஜப்பானிய மருந்து கட்டுப்பாட்டாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, உலக சுகாதார அமைப்பால் பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் 2 மற்றும் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் நிபந்தனையை அமல்படுத்தாது என்று இந்திய அரசு அறிவித்தது.

இப்போது கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் தாராளமயமாக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை மீறி, ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவுடன் எந்தவொரு கொள்முதல் ஒப்பந்தத்திலும் இன்னும் நுழையவில்லை.

பிப்ரவரி 3 முதல் மே 24 வரை, கொரோனா தொடர்பான 1,49,017 இறப்புகளை இந்தியா பதிவுசெய்துள்ளது. தடுப்பூசிகளின் பற்றாக்குறை நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைக் குறைத்துவிட்டது அல்லது நிறுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசி போடத் தவறியதுதான்,  கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும் விதித்த ஊரடங்குகள் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததற்கான காரணம்.

ஆனால் எந்த நேரத்தில் இந்தியா ஃபைசர் அல்லது மாடர்னாவிடமிருந்து மருந்துகளைப் பெறும் என்று தெரியவில்லை. காரணம்: ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட ஆர்டர்களை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கும் பல நாடுகள் இந்தியாவை விட முன்னால் உள்ளன, மேலும் 2020 டிசம்பரில் தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கிய இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் 2023 ஆம் ஆண்டில் இந்த நாடுகளுக்கு மில்லியன் கணக்கான அளவுகளை வழங்க உறுதிபூண்டுள்ளன.

திங்கட்கிழமையன்று, மத்திய சுகாதார அமைச்சகம் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டதாகத் தோன்றுகிறது.

"இது ஃபைசர் அல்லது மாடர்னாவாக இருந்தாலும், நாங்கள் மத்திய அரசாங்க அளவில் ஒருங்கிணைத்து வருகிறோம் ... ஃபைசர் மற்றும் மாடர்னா இரண்டுமே, பெரும்பாலும், அவற்றின் ஆர்டர் புத்தகங்கள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. அவர்கள் இந்தியாவுக்கு எவ்வளவு வழங்க முடியும் என்பது அவர்களின் உபரியைப் பொறுத்தது. அவர்கள் மீண்டும் இந்திய அரசுக்கு வருவார்கள், அவர்கள் வழங்கும் அளவை மாநில அளவில் வழங்குவதை நாங்கள் உறுதி செய்வோம் ”என்று சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறினார்.

வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கட்கிழமையன்று அமெரிக்காவிற்கு சென்றபோது, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களை சந்தித்து இந்தியாவுக்கு தேவையான பொருட்களைப் பற்றி விவாதித்தார்.

திங்கட்கிழமையன்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகியவை நேரடியாக மாநிலங்களுக்கு விற்க மாட்டோம் என்று அந்த நிறுவனங்களைத் தொடர்பு கொண்டபோது தெரிவித்ததாக அறிவித்தார். மேலும் பஞ்சாப் அரசு, மாடர்னாவுக்குப் பிறகு, ஃபைசரும் தடுப்பூசி கொள்முதல்களுக்கான கோரிக்கையை நிராகரித்ததாக கூறினார்.

ஃபைசரின் ஆர்டர் புத்தகத்தைக் கவனியுங்கள்

* அமெரிக்கா: கடந்த ஆண்டு ஜூலை மாதம், அமெரிக்கா முதலில் 100 மில்லியன் டோஸின் ஆரம்ப ஆர்டரை கொடுத்தது, மேலும் 500 மில்லியனைக் கோருவதற்கான விருப்பத்துடன் இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த கூடுதல் அளவுகளுக்கான விருப்பத்தை அமெரிக்கா இரண்டு முறை பயன்படுத்தியது, கடந்த ஆண்டு டிசம்பரிலும் இந்த ஆண்டு பிப்ரவரியிலும் தலா 100 மில்லியன் டோஸ்களை ஆர்டர் செய்தது.

* ஐரோப்பிய ஒன்றியம்: கையெழுத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் கருத்தில் கொண்டு, ஃபைசர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 2.4 பில்லியன் அளவுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது.

நவம்பர் 2020 இல், ஐரோப்பிய ஒன்றியம் அதன் 27 உறுப்பு நாடுகளுக்கு 200 மில்லியன் டோஸ் வழங்குவதற்காக ஃபைசருடன் ஒரு ஒப்பந்தத்தை செய்தது, கூடுதலாக 100 மில்லியன் டோஸைக் கோருவதற்கான விருப்பத்துடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த கூடுதல் டோஸ்களுக்கான விருப்பத்தைப் பயன்படுத்தி கொண்டது.

பிப்ரவரி 2021 இல், ஐரோப்பிய ஒன்றியம் 200 மில்லியன் டோஸ் வழங்குவதற்காக மற்றொரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது, கூடுதலாக 100 மில்லியன் டோஸைக் கோருவதற்கான விருப்பத்துடன்; ஐரோப்பிய ஒன்றியம் ஏப்ரல் மாதத்தில் இந்த விருப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது.

மே மாதத்தில், 900 மில்லியன் அளவுகளை வழங்குவதற்காக, மூன்றாவது ஒப்பந்தம் செய்யப்பட்டது, மேலும் 900 மில்லியன் வரை கோர விருப்பம் தெரிவித்தது. முதல் 900 மில்லியன் டோஸ் டிசம்பர் தொடங்கி 2023 வரை தொடர்ந்து மாதாந்திர அட்டவணை அடிப்படையில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* மற்றவை: கடந்த ஆண்டு ஜூலை மாதம், இங்கிலாந்து 30 மில்லியன் டோஸ் வழங்குவதற்காக ஃபைசருடன் ஒப்பந்தம் செய்தது; அதே மாதத்தில், ஜப்பான் 120 மில்லியன் அளவுகளுக்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆகஸ்ட் மாதம், கனடா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஜனவரி 2021 இல், கோவாக்ஸுக்கு 40 மில்லியன் டோஸை வழங்க ஃபைசர் ஒப்புக்கொண்டது.

இப்போது மாடர்னாவின் ஆர்டர் புத்தகத்தைக் கவனியுங்கள்.

* அமெரிக்கா: ஆகஸ்ட் 2020 இல், அமெரிக்கா 100 மில்லியன் டோஸ் மாடர்னாவின் எம்ஆர்என்ஏ தடுப்பூசியை ஆரம்ப ஆர்டரில் வைத்தது, மேலும் 400 மில்லியன் டோஸ் வாங்குவதற்கான விருப்பத்துடன். அமெரிக்கா இந்த விருப்பத்தை இரண்டு முறை பயன்படுத்தியது. அதாவது, டிசம்பர் 2020 மற்றும் பிப்ரவரி 2021 இல் தலா 100 மில்லியன் அளவுகளை ஆர்டர் செய்தது.

* ஐரோப்பிய ஒன்றியம்: கடந்த ஆண்டு நவம்பரில், ஐரோப்பிய ஒன்றியம் 80 மில்லியன் டோஸின் ஆரம்ப ஆர்டர் ஒப்பந்தத்தை மாடர்னாவுடன் வைத்தது; இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 80 மில்லியன் கூடுதல் அளவுகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கியது. இது கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த விருப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி 17 அன்று, ஐரோப்பிய ஒன்றியம் 150 மில்லியன் டோஸ் வாங்குவதற்கான மற்றொரு ஒப்பந்தத்தை அறிவித்தது, கூடுதலாக 150 மில்லியனை வாங்குவதற்கான விருப்பத்துடன். 150 மில்லியன் டோஸ் 2021 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

* மற்றவை: இங்கிலாந்தில் 7 மில்லியன் அளவுகள் மார்டனாவுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன; ஜப்பான், 50 மில்லியன்; கனடா, 44 மில்லியன்; தென் கொரியா, 40 மில்லியன்; மற்றும் ஆஸ்திரேலியா, 25 மில்லியன் டோஸ்.

2021 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் கோவாக்ஸுக்கு 34 மில்லியன் டோஸ் வழங்குவதற்கான ஒப்பந்தமும் மாடர்னாவுக்கு உண்டு.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine India Corona Vaccine Pfizer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment