Advertisment

ஜோ பைடன், கமலாவுக்கு வாழ்த்துகளை அனுப்பினார் பிரதமர் மோடி

ஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராக வருவதற்கு முன்பே, இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்துவதற்கு பைடன் ஒரு வலிமையான வாதிடுபவராக இருந்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
joe biden kamala harris us elections, pm modi joe biden, ஜோ பைடன், கமலா ஹாரிஸ், பிரதமர் மோடி, பிரதமர் மோடி வாழ்த்து, us president elect, us elections 2020, us presidential elections

SHUBHAJIT ROY

Advertisment

அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு ஆதரவாக அறிவிக்கப்பட்ட உடனேயே, இந்தியா - அமெரிக்க உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்திற்கு களம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை இரவு ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸை வாழ்த்தினார்.

பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பதிவில், மோடி பைடனின் அற்புதமான வெற்றியை வாழ்த்தியதோடு, துணை அதிபராக இந்திய -அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த உங்கள் பங்களிப்பு முக்கியமானதாகவும் விலைமதிப்பற்றதாகவும் இருந்தது. இந்தியா-அமெரிக்க உறவுகளை உச்சத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என்று கூறினார்.

“இந்திய-அமெரிக்க உறவுகளை உச்சத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடி, கமலா ஹாரிஸை வாழ்த்தி ஒரு தனி பதிவில், “உங்கள் வெற்றி ஒரு புதிய சகாப்தம். உங்களுடைய வெற்றி உங்கள் தாயின் சகோதரிகளுக்கு மட்டுமல்ல அனைத்து இந்திய அமெரிக்கர்களுக்கும் ஒரு மகத்தான பெருமை. உங்கள் ஆதரவு மற்றும் தலைமைத்துவத்துடன் துடிப்பான இந்திய-அமெரிக்க உறவுகள் இன்னும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளர்.

ஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராக வருவதற்கு முன்பே, இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வலுவாக வாதிடுபவராக பைடன் இருந்து வருகிறார்.

இந்தியாவுடனான ராஜதந்திர ஈடுபாட்டை முறையாக ஆழப்படுத்துவதில் செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும் பின்னர் துணைத் தலைவராகவும் அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

உண்மையில், 2006ம் ஆண்டில், அவர் துணை அதிபராக வருவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க-இந்தியா உறவுகளின் எதிர்காலம் குறித்த தனது பார்வையை பைடன் அறிவித்தார்: “2020ம் ஆண்டில், உலகின் மிக நெருக்கமான இரு நாடுகள் இந்தியா மற்றும் அமெரிக்காவாக இருக்கும் என்பது எனது கனவு.” என்று கூறினார்.

செனட்டர் ஒபாமா ஆரம்பத்தில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க தயங்கிய போதிலும், பைடன் இந்த விமர்சனங்களுக்கு தலைமை தாங்கினார்.ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினருடன் இணைந்து 2008-ல் அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் அணுசக்தி ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டார்.

இந்திய-அமெரிக்க கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக அவர் இருந்தார். குறிப்பாக ராஜதந்திர பகுதிகளில் முகிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். உண்மையில், அந்த நேரத்தில், சீர்திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் உறுப்புரிமையை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இது பைடனின் துணை அதிபராக இருந்த காலத்தில் வாஷிங்டனால் நிறைவேற்றப்பட்டது.

ஒபாமா-பைடன் நிர்வாகம் இந்தியாவை ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளி என்று பெயரிட்டது. இது அமெரிக்க பிரதிநிதிகள் அவையால் அங்கீகரிக்கப்பட்டது. இது பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியாவுடன் மேம்பட்ட மற்றும் விமர்சன தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதை எளிதாக்கியது. அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டணி முறைக்கு வெளியே எந்தவொரு நாட்டிற்கும் இந்த அந்தஸ்து வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பதால் இது மிகவும் முக்கியமானது.

உண்மையில், ஒபாமா நிர்வாகத்தின் கடைசி சில மாதங்களில், இரு தரப்பினரும் ஆகஸ்ட் 2016-இல் மூன்று அடித்தள ஒப்பந்தங்களில் முதல் தளவராடப் பரிமாற்ற ஒப்பந்தத்தில் (எல்.இ.எம்.ஓ.ஏ) கையெழுத்திட்டனர். டிரம்ப் நிர்வாகம் மீதமுள்ள அடித்தள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. தகவல் தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA) மற்றும் புவி-இடம்சார்ந்த ஒத்துழைப்புக்கான அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA) ஆகியவற்றில் கையெழுத்திட்டது.

ஒபாமாவும் பைடனும் தங்கள் நாடுகளிலும் பிராந்தியத்திலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தினர். “தெற்காசியாவில் எல்லை தாண்டிய அல்லது வேறு வகையில், பயங்கரவாத சகிப்புத்தன்மை இருக்க முடியாது என்று பைடன் நம்புகிறார்” என்று அவரது பிரச்சார ஆவணம் குறிப்பிட்டது.

பாகிஸ்தான் நிதியளிக்கும் பயங்கரவாதம் குறித்து நிர்வாகத்தில் அவர் இருந்த காலத்தில் அதிகம் கூறப்படவில்லை என்றாலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு வரும்போது இந்தியா-பாகிஸ்தான் குறித்த அமெரிக்க நிர்வாகத்தின் அணுகுமுறையின் மரபுகளை அவர் முன்னெடுத்துச் செல்வார் என்று புது டெல்லி நம்புகிறது.

கடந்த சில ஆண்டுகளில், வாஷிங்டனில் சீனாவின் ஆக்கிரோஷமான நடத்தை பற்றியும், ஓரளவு இரு கட்சிகளும் ஒருமித்த கருத்துடன், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் மத்தியில் சீனாவை ஒரு மூலோபாய போட்டியாளர் மற்றும் அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது.

சீனாவுடனான எல்லை நிலைப்பாடு தொடர்பாக இந்தியாவை ஆதரிப்பதில் டிரம்ப் நிர்வாகம் மிகவும் குரல் கொடுத்துள்ள நிலையில், பைடன் நிர்வாகத்திடமிருந்தும் இதேபோன்ற அணுகுமுறையை புது டெல்லி எதிர்பார்க்கும்.

“பைடன் நிர்வாகம் இந்தியாவுடன் இணைந்து விதிகள் அடிப்படையிலான மற்றும் நிலையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிக்கும். அதில் சீனா உட்பட எந்த நாடும் தனது அண்டை நாடுகளுக்கு தண்டனையின்றி அச்சுறுத்த முடியாது” என்று அவரது பிரச்சார ஆவணம் குறிப்பிட்டது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக்கேல் ஆர் பாம்பியோ உள்ளிட்ட டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியை மிகவும் வெளிப்படையாகத் தாக்கிக்கொண்டிருந்தாலும், பைடன் நிர்வாகத்தின் மொழி இன்னும் கொஞ்சம் துல்லியமாக ஒலிக்கலாம்.

இந்தியர்களுக்கான குடிவரவு மற்றும் விசாக்கள், குறிப்பாக திறமையான நிபுணர்களுக்கான எச் 1 பி விசாக்கள், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்தியர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியினர் குடியேற்றத்தை நோக்கி அதிக தாராளமயமானவர்களாகக் காணப்படுவதால், அமெரிக்காவிற்குச் சென்று படிப்பதற்கும், வேலை செய்வதற்கும், அங்கு வாழ்வதற்கும், சிறந்த வாழ்க்கைக்காக ஆசைப்படுபவர்களுக்கும் பைடன் ஏதுவாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப அடிப்படையிலான குடியேற்றத்தை ஆதரிப்பதாகவும், நிரந்தர, வேலை அடிப்படையிலான குடியேற்றத்திற்காக வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும், உயர் திறன், சிறப்பு வேலைகளுக்கான தற்காலிக விசா முறையை சீர்திருத்துவதாகவும், வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு வரம்புகளை நீக்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான இயல்பான நடைமுறையை மீட்டெடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஆனால், டிரம்ப் நிர்வாகம் விதிகளை கடுமையாக்கியபோது கடந்த 4 ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட சில அணுகுமுறைகளை பைடன் மாற்றியமைப்பது மிகவும் எளிதானது அல்ல.

மனித உரிமைகள் தொடர்பான அவரது அணுகுமுறை - ஹாரிஸும் மனித உரிமைகளை கடுமையாக ஆதரிப்பவர் - இது புது டெல்லியில் ஒருவித புழுக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. புதுடெல்லி ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவைப் பெற்றது.

370 வது பிரிவு திருத்தம் செய்யப்பட்டதும் குடியுரிமை (திருத்தம்) சட்டம் இயற்றப்பட்டதும், என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டதும் சில அமெரிக்க பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள், அங்கே உரிமை நிலைமை குறித்து எச்சரிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால், டிரம்ப் நிர்வாகம் சில செயலற்ற அறிக்கைகளைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஆனால், ஜனநாயகக் கட்சியினர் ஆட்சியில் இருப்பதால், இந்த விவகாரங்களில் பைடன் நிர்வாகத்திடமிருந்து சில கடுமையான அறிக்கைகளை இந்திய அரசு எதிர்பார்க்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Narendra Modi Modi Joe Biden Kamala Harris
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment