Advertisment

நல்லாட்சிக்கும், முன்னேற்றத்திற்கும் கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி பெருமிதம்!

இரு மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க இருப்பது ஏறக்குறை உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி பாஜகவின் வெற்றி குறித்து ட்வீட் .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நல்லாட்சிக்கும், முன்னேற்றத்திற்கும் கிடைத்த வெற்றி - பிரதமர் மோடி பெருமிதம்!

குஜராத் தேர்தலில் மாலை 4.15 மணி நிலவரப்படி, பாஜக 62 இடத்திலும், காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன. மேலும், 37 இடங்களில் பாஜகவும், 23 இடங்களில் காங்கிரசும் முன்னிலை வகிக்கின்றன.

Advertisment

ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக 14 இடத்திலும், காங்கிரஸ் 8 இடத்திலும் இதுவரை வெற்றிப் பெற்றுள்ளன. இங்கு பாஜக மேலும் 30 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இரு மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க இருப்பது ஏறக்குறை உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி பாஜகவின் வெற்றி குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், "பாஜக மீது நம்பிக்கையும், நேசமும் வைத்ததற்காக குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாநில மக்களை வணங்குகிறேன். நிச்சயமாக, ஓய்வின்றி தொடர்ந்து இம்மாநிலங்களின் வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம் என நான் உறுதியளிக்கிறேன்.

சிறப்பான ஆட்சிக்கும், முன்னேற்றத்திற்கும் கிடைத்த மக்களின் வலிமையான ஆதரவின் வெளிப்பாடு தான் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தல்களில் எதிரொலித்துள்ளது. இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த பாஜகவினருக்கும் எனது வணக்கம்" என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment