PSLV C45 : 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட்.
எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கைக் கோள்களுடன், பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் காலை 9.27 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி-க்கு இது 47-வது பயணமாகும்.
இந்தியாவின் எமிசாட் செயற்கைகோள் உட்பட 28 நானோ வகை செயற்கைகோள்கள் இதன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.
தவிர, இந்தாண்டில் இஸ்ரோ ஏவிய இரண்டாவது ராக்கெட் இது. 436 கிலோ எடைக் கொண்ட இந்த எமிசாட் செயற்கைகோள், ராணுவத்திற்கு பயன்படும் எனவும், மின்காந்த அலைக்கற்றைகளை கண்காணிக்கும் எனவும் கூறப்படுகிறது.
தவிர, உலகிலேயே புவி வட்டப் பாதையில் 3 செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட உள்ளன.