Advertisment

விஷ குளவி கொட்டியதால் விபரீதம் : அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்

Puducherry ex mla dead : புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன் விஷ வண்டு கடித்து பலியான சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
puducherry, admk., mla. purushothaman, dead, wasp bite, hospital, treatment, condolence

puducherry, admk., mla. purushothaman, dead, wasp bite, hospital, treatment, condolence, புதுச்சேரி, அதிமுக, முன்னாள் எம்எல்ஏ, மரணம், குளவி, விஷம், சிகிச்சை, மருத்துவமனை

புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன் விஷ வண்டு கடித்து பலியான சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுச்சேரி மாநில அ.தி.முக. செயலாளராக இருந்தவர் புருஷோத்தமன். இவர் முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். புருஷோத்தமனுக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. தற்போது அங்கு விவசாயப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயப்பணிகளில் பெரும்பாலும், புருஷோத்தமனே நேரடியாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், விஷத்தன்மை வாய்ந்த செங்குளவி, புருஷோத்தமனை கொட்டியது. இதனால், . துடித்துப் போன புருஷோத்தமன் வலி தாங்க முடியாமல் அலறினார். இதைப் பார்த்த அருகில் இருந்த விவசாயப் பணியாளர்கள் புருஷோத்தமனை மீட்டனர்.

பின்னர் அவரை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து போனார். விஷ வண்டு கடித்து புருஷோத்தமன் மறைந்த சம்பவம் புதுச்சேரி மாநில அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Aiadmk Puducherry Mla
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment