ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு தமிழக வீரர் உட்பட 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் ரத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அப்பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்தனர்.
அப்போது பயங்கரவாதிகளுக்கும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கும் பயங்கர துப்பாக்கி சூடு நடந்தது. 300 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தினர், சி.ஆர்.பி.ஃஎப் வாகனத்தின் மோதச் செய்தது, இதனால் 40 வீரர்கள் பலியாயினர். இதில் தமிழக வீரர் சுப்பிரமணியனும் அடங்குவார்.
இந்நிலையில் இந்தத் தாக்குதலில் பலியான பீகாரைச் சேர்ந்த ரதன் தாகூர் என்பவரின் தந்தை, “நாட்டுக்கு சேவை சென்ற என் மகனை இழந்திருக்கிறேன். இருப்பினும் எனது அடுத்த மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன்” என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.