Advertisment

கிறிஸ்துவ, இஸ்லாமிய தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கொடுக்க வேண்டும் என்ற வழக்கில், மத்திய அரசு 3 வாரங்களுக்குள் அதன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
கிறிஸ்துவ, இஸ்லாமிய தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கொடுக்க வேண்டும் என்ற வழக்கில், மத்திய அரசு 3 வாரங்களுக்குள் அதன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

தலித் சமூகத்தினர் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்களுக்கு மாறுகையில், அவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கான  இட ஒதுக்கிடு சலுகை வழங்கப்பட வேண்டும்  என்று பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ். கே காயுல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் அபயா எஸ் ஒகா, விக்ரம் நாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர்  ஜெனரல் திஸ்சூர் மேத்தா கூறுகையில் “ இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், சமூக படிநிலையில் சிறிது மேன்மை அடைவதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்வது தொடர்பான கேள்வி எழுகிறது’ என்று கூறினார்.

பொது நல வழக்கின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் புஷன் கூறுகையில்” 1950 ஆண்டு வெளியான சட்டம்படி பட்டியலின சமூகத்தினர் என்பவர்கள் இந்து, புத்தம், சீக்கியம் மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுவது மதத்தின் பெயரில் தீண்டாமையை கடைபிடிப்பதாகும்.

மேலும் அவர் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை குறிப்பிட்டார் இதில் “ மாதம் மாறிய தலித் சமூகத்தினரும், இந்து தலித் சமூகத்தினரைப் போலவே ஒடுக்குமுறையை சந்திப்பதாக கூறினார்.

இந்நிலையில் நீதிபதி காயுல் கூறுகையில் “ இட ஒதுக்கீடுட்டின் கீழ் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்குவதா? ஏற்கனவே இது ஓபிசி சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பட்டியலின சமூகத்தினருக்கு வழகுங்வதில் சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment