மோடி அரசாங்கம், தனது சொந்த நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டு, இப்போது அண்டை நாடுகளை ஆபத்தில் ஆழ்த்துவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவிற்கு புதிய அச்சுறுத்தலாக, சீனா இப்போது பூட்டானில் சட்டவிரோதமாக கிராமங்களை கட்டுவதாக ஒரு செய்தி அறிக்கையை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியுள்ளார்.
இதை குறிப்பிட்டு “மோடி அரசு முதலில் நமது நிலத்தை ஒப்படைத்துவிட்டு, இப்போது சீனாவை பின்னுக்குத் தள்ளுவதில் அதன் செயலற்ற தன்மையால் நமது நெருங்கிய அண்டை நாடுகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்காக நீங்கள் நிற்காவிட்டால், உங்கள் நண்பர்களுக்காக எப்படி நிற்பீர்கள், ” என்று ட்விட்டரில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “