Rahul Gandhi Calls Narendra Modi Prime time Minister: பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகத்தில் தேச மக்கள் இருந்தனர். ஆனால் அந்த நேரமும் கூட பிரதமர் உத்திரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் கேமராக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
40 ராணுவ வீரர்கள் மரணமடைந்து 3 மணி நேரம் ஆன பின்பும் கூட பிரதம அமைச்சர் போட்டோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர் ஒரு ப்ரைம் டைம் மினிஸ்டர் என்று கூறி ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.
இந்த தாக்குதல் நடந்த போது, மத்திய அரசின் அனைத்துவிதமான உதவிகளையும் அளித்து ஆதரவுக்கரம் நீட்டியது காங்கிரஸ். தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் வைக்கும் முதல் குற்றச்சாட்டு இதுவே.
மேலும் படிக்க : மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஏற்றுக்கொண்டது சீனா