Congress leader Rahul Gandhi Tamil News: 'பாரத் ஜோடோ யாத்ரா' நிகழ்ச்சியின் போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (வயது 52) யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் தனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை "என் வாழ்க்கையின் அன்பு மற்றும் எனது இரண்டாவது தாய்" என்று பாசத்துடன் உருகினார்.
அப்போது அவரிடம், "அப்படிப்பட்ட ஒரு பெண்ணுடன் நீங்கள் வாழ்வில் செட்டில் ஆகுவீர்களா?" என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல், "இது ஒரு சுவாரசியமான கேள்வி… நான் ஒரு பெண்ணையே விரும்புவேன். அவரது குணநலன்கள் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.
ஆனால், என் அம்மா மற்றும் பாட்டியின் குணங்களின் கலவை நன்றாக இருக்கிறது.ஆனால் அந்த பெண் என் அம்மா மற்றும் என் பாட்டியின் குண நலன்கள் கலந்து இருந்தால் நல்லது" என்று பதிலளித்தார்.
பப்பு என அழைப்பது பற்றிய ராகுலின் கருத்து
அவரது எதிர்ப்பாளர்கள் பல்வேறு பெயர்களை வைத்து அவரை அழைப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி, "நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன். நீங்கள் என்ன சொல்ல விரும்பினாலும், அதுபற்றி கவலை இல்லை. நான் யாரையும் வெறுக்க மாட்டேன். நீங்கள் என்னை தவறாக நடத்தலாம், ஏன் என்னை அடிக்கவும் செய்யலாம். நான் உங்களை வெறுக்க மாட்டேன்.
என்னை பப்பு என்று அழைக்கிறார்கள் என்றால் அது ஒரு பிரசாரம். அவர்கள் தங்களுக்குள் இருக்கிற பயத்தால் அப்படி சொல்கிறார்கள். நீங்கள் எனக்கு இன்னும் பல பெயர்களை வைக்கலாம். நான் கவலைப்படவில்லை. நான் நிம்மதியாகவே இருக்கிறேன்" என்று பதில் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil