Advertisment

ஒற்றுமை யாத்திரை.. ராகுல் காந்தி நடைபயணத்தில் ரோகித் வெமுலா தாயார் பங்கேற்பு

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் ரோகித் வெமுலாவின் தாயார் கலந்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
Rahul Yatra Day 55 Rohith Vemulas mother joins in as Telangana civil society provides march a push

ராகுல் காந்தியுடன் ரோகித் வெமுலா தாயார்

ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் 55வது நாளான செவ்வாய்கிழமை ஹைதராபாத் சென்றார். அப்போது, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் தாயாரும் நடைபயணத்தில் கலந்துகொண்டார். ரோகித் வெமுலா 2016ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டவர் ஆவார்.

இந்த நிலையில், யாத்திரையின் ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்து, தனது இலக்கை அடைய அவளிடமிருந்து "புதிய தைரியம்" கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

Advertisment

ராகுல் காந்தி இன்னும் 6 நாள்கள் தெலங்கானாவில் நடைபயணம் மேற்கொள்வார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் ஹைதராபாத் பயணத்திற்கு பின்னால் ஒரு பெரும் கூட்டம் கூடியது.

இருப்பினும், பெரும்பாலான உந்துதல் பல்வேறு சிவில் சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களால் வழங்கப்படுகின்றன.

மேலும் ராகுல் யாத்திரையில் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோரும் உள்ளனர்.

தெலுங்கானாவில் ராகுலின் ஏழாவது நாளான திங்கட்கிழமை, அவர் ஷம்ஷாபாத்தில் இருந்து தொடங்கியபோது, அதேபோன்ற கூட்டம் அவரை வரவேற்றது.

ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு அவருடன் இடைவெளியில் நடந்து சென்றனர். வெமுலாவின் தாயார் ராதிகா அவருடன் இணைந்த பிறகு, ராகுல் ட்வீட் செய்தார்.

அதில், "ரோகித்தின் தாயை சந்தித்த பிறகு, இந்தப் பயணத்தின் இலக்கை நோக்கிச் செல்ல எனக்கு புதிய தைரியமும், புதிய மன உறுதியும் கிடைத்தது. சமூக பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக வெமுலா இருப்பார்” என்றும் ராகுல் தெரிவித்திருந்தார்.

26 வயதான வெமுலா, தலித் என்ற காரணத்திற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தின் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலைக் கூறி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக, ஏபிவிபி தலைவர் ஒருவரின் புகாரின் பேரில் அவரும் மற்ற நான்கு பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், சிவில் சமூக குழு உறுப்பினர்கள் ராகுலை சந்தித்து பேச வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல், தெலுங்கானா தொழிற்சங்க கூட்டமைப்பு, பிரவாசி மித்ரா தொழிலாளர் சங்கம் போன்ற குழுக்களின் உறுப்பினர்களும், ரித்து ஸ்வராஜ் வேதிகாவின் உறுப்பினர் பேராசிரியர் ஜி.ஹரகோபால் போன்ற கல்வியாளர்களும் ராகுல் நடைபயணத்தில் கலந்துகொண்டுள்ளனர் என தலைவர் முகம்மது கலீல் கூறினார்.

இதற்கிடையில், ஜெய் கவுடா தெலுங்கானா சங்கம் போன்ற அமைப்புகள் தாங்களாகவே யாத்திரையில் இணைவதாக ஒரு தன்னார்வலர் கூறினார்.

குறிப்பாக உஸ்மானியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றதால் உற்சாகமடைந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இளைஞர் காங்கிரஸை சேர்ந்த அனில் யாதவ், “அவர்கள் ராகுலிடம் குறைகளை எடுத்துரைக்க வருகிறார்கள், ஆனால் அவரது பாதயாத்திரையால் ஈர்க்கப்பட்டு அவருடன் முடிந்தவரை அணிவகுத்துச் செல்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமை காலை, பேராசிரியர் ஜெயசங்கர் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் எங்களுடன் இணைந்தனர்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/i

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment