Advertisment

கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி காவிரி நீர்: கன்னட அமைப்பினர் இனிப்புகள் வழங்கி உற்சாகம்

கர்நாடகாவுக்கு கூடுதலாக 14 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ரக்‌ஷன வேதிகே எனும் கன்னட அமைப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி காவிரி நீர்: கன்னட அமைப்பினர் இனிப்புகள் வழங்கி உற்சாகம்

காவிரி நதிநீர் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கினார்.

Advertisment

அதில், 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட 192 டி.எம்.சி. தண்ணீரில் 14 டி.எம்.சி. நீரை குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அந்த 14 டி.எம்.சி. நீரை கர்நாடகாவுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தீர்ப்பை தான் வரவேற்பதாக கூறினார். இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனால் பெங்களூரு நகர மக்களின் குடிநீர் பிரச்சனை தீரும் எனவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் நன்மை தரக்கூடிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பதாக, கர்நாடக தரப்பு வழக்கறிஞர் மோகன் வி.கட்டார்கி தெரிவித்தார்.

கர்நாடகாவுக்கு கூடுதலாக 14 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ரக்‌ஷன வேதிகே எனும் கன்னட அமைப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Karnataka Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment