Advertisment

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கு: மீண்டும் விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 22ல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரணை நடத்துகிறது.

Advertisment

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட னர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்) உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 48-க்கும் மேற்பட்ட மறுஆய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த அக்டோபர் 23ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு நவம்பர் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது.

அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா அமர்வு முன்பு மறுஆய்வு மனுக்கள் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தன.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், "சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் விசாரிக்கும். இதுபோலவே 3 ரிட் பெட்டிஷன்களும், மறுசீராய்வு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கப்படும். எனினும் முந்தைய தீர்ப்பு தற்போது அமலில் உள்ளது. அதற்கு இடைக்கால தடை ஏதும் இல்லை. தற்போதைய நிலைப்படி சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்" என்று தெரிவித்துள்ளனர்.

Sabarimala Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment