Advertisment

சபரிமலை விவகாரம்.. அடக்கிவாசிக்கும் முன்னாள் அமைச்சர்.. சண்டைக்கு தயாரில்லாத விஜயன் அரசு

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயதினரையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறிய சுதாகரன், தற்போது அப்படி எந்தத் திட்டமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sabarimala order

நவ.18, 2022இல் பத்தனம்திட்டாவில் கூடிய சுவாமி ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயதினரும் நுழைய அனுமதித்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, பினாராயி விஜயன் தலைமையிலான அரசாங்கம் இந்த முடிவுக்கான உண்மையான ஆதரவிலிருந்து மேலும் விலகிவிட்டது.

Advertisment

சபரிமலை கோவில் மகர விளக்கு மண்டலப் பூஜைக்காக, புதன்கிழமை (நவ.16) திறக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து, மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

இதற்கு பாஜக, இந்துத்துவா அமைப்புகள் எதிர்த்து தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ந்து, அந்த அறிக்கையை மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம் திரும்ப பெற்றுக்கொண்டது.

சில நாட்களுக்கு முன், சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவரும், கோவில் விவகார முன்னாள் அமைச்சருமான ஜி.சுதாகரன், மாதவிடாய் வயதுடைய பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற பழங்கால நடைமுறையில் எந்த மாற்றமும் தேவை இல்லை. இது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் மற்றும் மதிக்கும் ஒன்று என்று கூறியிருந்தார்.

இதற்கு முன்னர், வி.எஸ் அச்சுதானந்தன் ஆட்சியில் 2006 முதல் 2011 வரை கோயில் விவகார அமைச்சராக இருந்தபோது, ​​சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுதாகரன் வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்தார்.

செப்டம்பர் 2018இன் உச்ச நீதிமன்ற உத்தரவின் பின்னால் பினராயி விஜயன் அரசாங்கம் முதலில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்தது.

கோவிலுக்குச் செல்ல விரும்பும் மாதவிடாய் வயதுடைய பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கியது. இதற்கிடையில் பாஜக உள்ளிட்ட இந்து குழுக்களின் அழுத்தத்தை மார்க்சிஸ்ட் அரசாங்கம் சந்தித்தது.

மாநிலத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.

2018 ஆம் ஆண்டு உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிடவில்லை என்றாலும், இது கேரள அரசை விரைவுப்படுத்தியது.

இந்த நிலையில் மாநில அரசின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, சிபிஐ(எம்) மூத்த தலைவரும், கோவில் விவகாரத்துறை அமைச்சருமான கே.ராதாகிருஷ்ணன், அனைத்து பெண்களும் நுழைவதை எளிதாக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றார்.

மேலும், "நாங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி செல்வோம்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய பாஜக, அனைத்து பெண்களும் நுழைவதை உறுதிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்துவதை அரசாங்கம் மீண்டும் நோக்கமாகக் கொண்டிருப்பதை கையேடு காட்டுகிறது எனக் கூறியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட முதல் யாத்திரை சீசன் இந்த ஆண்டு பெரும் கூட்டத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 2018 மற்றும் 2019 சீசனின்போது வன்முறை மற்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

பல ரிட் மனுக்களைத் தொடர்ந்து இந்த வழக்கை ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.

2019 மக்களவை முடிவுகளின் பகுப்பாய்வு, உச்ச நீதிமன்றத்தை ஆதரிக்கும் அதன் கடுமையான நிலைப்பாடு இந்துக்களின் வாக்குகளை இழந்துவிட்டது என்ற முடிவுக்கு CPI(M) இட்டுச் சென்றது.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கட்சி கடமைப்பட்டு இருப்பதாகவும், அதே போல் மாநிலத்தின் மறுமலர்ச்சி மதிப்புகள் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும் பினராயி விஜயன் இந்தப் பிரச்சினையில் முன்னிலை வகித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sabarimala Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment