Advertisment

இருமுடியுடன் சபரிமலைக்கு சென்ற பொன்னார்... தடுத்து நிறுத்திய கேரள காவல் துறை

பாஜக எம்.பிக்களான முரளிதரன், நளீன் குமார் கட்டீல் போன்றோர்கள் பக்தர்களுக்கு போதுமான வசதிகளை கேரள அரசு செய்திருக்கிறதா என்று சோதனையில் ஈடுபட்டனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சபரிமலையில் பொன். ராதாகிருஷ்ணன்

சபரிமலையில் பொன். ராதாகிருஷ்ணன் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் தொடர்ந்து பல்வேறு விதமான சர்ச்சைகளும் பிரச்சனைகளும் ஏற்பட்டு வந்ததைத் தொடங்கி, சபரிமலை கோவிலிற்கு வரும் பக்தர்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

மேலும் நிலக்கலில் இருந்து கோவிலுக்கு செல்பவர்கள் அனைவரும் கேரள மாநில அரசின் பேருந்தில் தான் பயணிக்க வேண்டும் என்றும், தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கப்பல்த் துறை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு தன்னுடைய வாகனத்தில் சென்று உள்ளார். அவர் வந்த வாகனத்தை தடுத்தி நிறுத்தி, அவரையும் மற்ற பக்தர்களுடன் ஒன்றாக அமர வைத்து அரசு பேருந்தில் சபரிமலைக்கு அனுப்பி வைத்தனர் கேரள காவல் துறையினர்.

மேலும் படிக்க : சபரிமலைக்கு அடுத்த முறை சொல்லாமல் வருவேன் என்று கூறிய திருப்தி தேசாய் யார் ?

சபரிமலையில் பொன். ராதாகிருஷ்ணன் : காவல்துறையுடன் வாக்குவாதம்

இது குறித்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஐ.பி.எஸ் ஆபிசர் யத்தீஷ் சந்திரா தெரிவிக்கையில் “அமைச்சர் அவருடைய அலுவலக வண்டியிலேயே கூட வந்திருக்கலாம். இருப்பினும் பம்பையில் இருந்து சபரிமலைக்கு கேரள அரசு பேருந்தில தான் செல்ல வேண்டும். சபரிமலையில் நிலவி வரும் பதற்றமான சூழலை தடுக்க கேரள அரசு எடுத்திருக்கும் முடிவு இது” இதனை மாற்ற இயலாது என்று கூறியிருக்கிறார்.

காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பொன்னார் - வீடியோ

காவல் துறையினருக்கும் அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அமைச்சர் “ஏன் தனியார் வாகனங்களை உள்ளுக்குள் அனுமதிக்காமல், ஐயப்ப பக்தர்களுக்கு இடைஞ்சல்களை தருகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த சந்திரா “ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் மிகவும் சேதாரம் ஆகியுள்ளது” அதனால் தான் தனியார் வாகனங்களை உள்ளுக்குள் அனுமதிக்க இயலவில்லை. அந்த வாகனங்களை அனுமதித்தால் பக்தர்களுக்கு மேலும் இன்னல்களாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய யதீஷ் சந்திரா யார்?

அதன் பின்னர் நிலைமையை எடுத்துக் கூறி கேரள மாநில பேருந்தில் சபரிமலை சென்றார் பொன்னார். சபரிமலையில் 144 பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று பம்பை மற்றும் நிலக்கலில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாஜக எம்.பிக்களான முரளிதரன், நளீன் குமார் கட்டீல் போன்றோர்கள் பக்தர்களுக்கு போதுமான வசதிகளை கேரள அரசு செய்திருக்கிறதா என்று சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment