Advertisment

அடுத்த சாமியாருக்கு தீர்ப்பு ரெடி: சாமியார் ராம்பால் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மற்றொரு சாமியார் ராம்பால் மீதான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sant Rampal, haryana, punjab

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஹரியானாவின் மற்றொரு சாமியார் ராம்பால் மீதான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

Advertisment

ஹரியானா மாநிலம் ஹிசாரில் ஆசிரம் அமைத்து சாமியாராக வலம் வந்தவர் ராம்பால். பொறியாளராக வாழ்க்கையை தொடங்கி, ஆன்மிகத்தில் இறங்கி பிரபலம் ஆனவர் ராமாபால். இவரது ஆசிரமம் ஒரு குட்டி அரசாங்கம் போல செயல்பட்டு வந்தது.

சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவளார்கள், ரோஹ்தக் கிராம வாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்தும், மேலும் பலரை படுகாயமடைய செய்த வழக்கில் சிக்கினர்.

இதுதொடர்பான வழக்கில் கைது நடவடிக்கைகளை தவிர்த்து வந்த ராம்பால், சுமார் 43 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் தவிர்த்து வந்தார். இதனால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரது ஆசிரமத்தை ஹரியானா மாநில காவல்துறை சுற்றி வளைத்த போது, ராம்பால் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு போலீஸில் சிக்காமல் 12 ஏக்கர் நிலப்பரப்புள்ள ஆசிரமத்துக்குள் சாமியார் ராம்பால் பாதுகாப்பாக இருந்து வந்தார்.

அமைதியான முறையில் அவரை கைது செய்ய முடியாது என்று தெரிய வந்ததும், ஆசிரமத்துக்குள் செல்லும் மின்சாரம் மற்றும் தண்ணீர் சப்ளையை அதிகாரிகள் துண்டித்தனர். தொடர்ந்து, ஆசிரமதுக்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் மீது ராம்பால் ஆதரவாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வெடி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். போலீசார், துணை ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. முடிவில், சாமியாரின் ஆதரவாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு, சாமியார் ராம்பாலை போலீசார் கைது செய்தனர். காவல்துறை மற்றும் சாமியார் ஆதரவாளர்களுக்கிடையே நடைபெற்ற தாக்குதலில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். ஆசிரமத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாகவும் ராம்பால் மற்றும் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் மீது மொத்தம் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஹிசார் மத்திய சிறையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அவர் மீதான வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வழக்குகள் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 29-ம் தேதி (இன்று) வழங்கபப்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக, பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதும், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கலவரம் வெடித்தது. இதில், சிக்கி சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

எனவே, சாமியார் ராம்பால் மீதான தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு நீதிமன்றத்திடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Punjab Haryana Gurmeet Ram Rahim Singh Sant Rampal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment