Advertisment

இடஒதுக்கீடு தொடர்பான மாநில அரசின் அதிகாரம் -மத்திய அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி

பிற்படுத்தப்பட்டோர் குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

author-image
WebDesk
New Update
இடஒதுக்கீடு தொடர்பான மாநில அரசின் அதிகாரம் -மத்திய அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி

கடந்த மே 5ஆம் தேதி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

Advertisment

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மே5ஆம் தேதி அளித்த தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய போதிய அடிப்படை இல்லை. இந்த மறு ஆய்வு மனுவில் குறிப்பிட்டிருக்கும் பல்வேறு விவரங்கள், இந்த வழக்கு தீர்ப்பு விவாதத்தின்போதே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன என கூறி மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி ரத்து செய்தது.

அரசியலமைப்பின் 102வது சட்டத் திருத்தத்தின்படி சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என கூறியது.

அந்த சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் பின் தங்கிய வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. எந்தவொரு சமூகத்தையும் சேர்க்க விலக்க மாற்றம் செய்ய தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் அல்லது குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைகளை மட்டும்தான் மாநிலங்களால் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

பல மாநிலங்கள் திருத்தத்தின் விளக்கம் குறித்து கேள்விகளை எழுப்பின. இது மாநிலங்களின் அதிகாரங்களை குறைக்கிறது என்று வாதிட்டனர். 102 ஆவது திருத்தத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை அமர்வு ஏகமனதாக உறுதிசெய்தது, ஆனால் இது SEBC களை அடையாளம் காணும் மாநிலங்களின் உரிமையில் பாதிக்கிறதா என்ற கேள்வியில் வேறுபடுகிறது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், மத்திய அரசுக்கு பிரத்தியேக அதிகாரங்களை வழங்குவது திருத்தத்தின் நோக்கம் அல்ல என்றும், பின்தங்கிய வர்க்கத்தை அடையாளம் காண எந்த மாநிலத்திற்கும் அதிகாரம் இருக்காது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது என்றும் வாதிட்டார்.

வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக மாநில அரசு தனி SEBC களின் பட்டியலைக் வைத்திருக்கும். அதே போல மத்திய அரசு வேலைகளுக்கு பொருந்தும் SEBC களின் மத்திய பட்டியலை மட்டுமே பாராளுமன்றம் உருவாக்கும் என்றார்.

இந்த தீர்ப்பு பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்பு மாதிரியை கிட்டத்தட்ட பிரதிபலித்தது. எஸ்சி / எஸ்டி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில், அரசியலமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு பட்டியலில் சம்பந்தப்பட்ட சமூகத்தை ஜனாதிபதி அறிவிக்கிறார். மேலும் அதைத் திருத்துவதற்கான அதிகாரங்கள் பாராளுமன்றத்தில் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment