Advertisment

சோசியலிஸ்ட் தலைவர் சரத் யாதவ் மரணம்.. மகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மோடி, கார்கே இரங்கல்

Sharad Yadav death : சோசியலிஸ்ட் தலைவராக அறியப்பட்டவரும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் தனது 75ஆவது வயதில் காலமானார். அவரது இறப்பை மகள் சுபாஷினி யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
socialist leader Sharad Yadav passed away

சோசலிஸ்ட் தலைவர் சரத் யாதவ்

Sharad Yadav death : ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரத் யாதவ் காலமானார்.

இது குறித்து அவர் சிகிச்சை பெற்ற போர்டிஸ் மெமோரியல் ரிசர்ஜ் இன்ஸ்ட்டியூட் மருத்துவமனை அளித்துள்ள அறிக்கையில், “ACLS நெறிமுறைகளின்படி அவர் CPRக்கு உட்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்தும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை, இரவு 10.19 மணிக்கு இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

யாதவ் 1999 மற்றும் 2004 க்கு இடையில் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் பல்வேறு இலாகாக்களை வகித்தார். அவர் சமீபத்தில் 2018 இல் அவர் களமிறங்கிய லோக்ட்ராண்டிக் ஜனதா தளத்தை (LJD) ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் (RJD) இணைத்தார்.

1970 களில் ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையிலான இயக்கத்தின் தொண்டரான சரத் யாதவ் 2003 இல் ஜனதா தளத்திலிருந்து பிரிந்த பிறகு ஜனதா தளத்தின் (யுனைடெட்) நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.

2017 இல், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பிரிவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததன் மூலம் சரத் ஜே.டி.(யு) மீதான தனது உரிமையை இழந்தார்.

பின்னர், "கட்சி விரோத நடவடிக்கைகளில்" ஈடுபட்டதாக குமார் அவருக்கு எதிராக மனு தாக்கல் செய்ததால், அவர் ராஜ்யசபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டில், ஜேடியூவில் இருந்து பிரிந்த பிறகு, யாதவ் எல்ஜேடியில் இணைந்தார்.

இந்திய அரசியலில் சரத் யாதவ் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவர் 7 முறை மக்களவைக்கும், 3 முறை மாநிலங்களவைக்கு தேர்வானார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக 2013 முதல் 2016வரை திகழ்ந்தார். இந்த நிலையில், காலமான சரத் யாதவ்வின் மறைவை அவரது மகள் சுபாஷினி யாதவ் அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

சோசலிஸ்ட் தலைவர் சரத் யாதவ்வின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் அறிக்கையில், “ஸ்ரீ சரத் யாதவ் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில், எம்.பி., அமைச்சர் என தனித்து விளங்கினார்.

டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். நான் எப்போதும் அவரை போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.

,

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, “சோசலிஸ்ட் தலைவரும் முன்னாள் ஜேடி(யு) தலைவருமான சரத் யாதவின் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது.

நாட்டிற்கு சேவை செய்த அவர், சமத்துவ அரசியலை வலுப்படுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Jd U
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment