Advertisment

கடைசி வாய்ப்பை மறுத்து அரசை தாக்கும் சித்து; எதிர்வினையாற்றிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்

Sidhu turns down ‘last chance’, attacks Govt; Channi reacts by halting replacement of AG: சித்துவுக்கு கடைசி வாய்ப்பை வழங்கிய காங்கிரஸ்; மறுத்து அரசை தாக்கும் சித்து; எதிர்வினையாற்றிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்

author-image
WebDesk
New Update
கடைசி வாய்ப்பை மறுத்து அரசை தாக்கும் சித்து; எதிர்வினையாற்றிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்

திங்களன்று நவ்ஜோத் சிங் சித்து தனது சொந்தக் கட்சியின் அரசாங்கத்தைத் தாக்கினார், இது காங்கிரஸ் தலைமையையும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியையும் தூண்டிவிட்டு, பஞ்சாப் மாநிலத்தின் உயர்மட்ட சட்ட அதிகாரிக்கான காலியிடத்தை உருவாக்குவதற்கான தற்போதைய செயல்முறையை நிறுத்த வேண்டியதாயிற்று. இந்த பதவிக்கு சித்து தனது சொந்த விருப்பத்தை (தனக்கு வேண்டிய ஒருவரை) பரிந்துரைத்துள்ளார்.

Advertisment

பஞ்சாப் அட்வகேட் ஜெனரல் (ஏஜி) ஏபிஎஸ் தியோல் பிற்பகலில் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் ஒப்படைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஒரு அசாதாரண திருப்பத்தை ஏற்படுத்தினார். அதாவது சித்துவின் "அழுத்தம்" இருந்தபோதிலும், அவர் பதவியில் நீடிப்பதாக அறிவித்தார்.

பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (பிபிசிசி) தலைவர் பதவியிலிருந்து செப்டம்பர் 28 ஆம் தேதி ராஜினாமா செய்ததை திரும்பப் பெற உள்ள சித்துவுக்கு இறுதிச் சலுகையாக அட்வகேட் ஜெனரலை மாற்றுமாறு காங்கிரஸ் தலைமை சன்னியைக் கேட்டுக் கொண்டது.

அதன்படி, தியோல் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். திங்கள் பிற்பகல் அவர் அதைச் செய்தார். ஆனால் சித்து அரசியல் போர்நிறுத்தத்தை கடைபிடிக்க தவறிவிட்டார்.

பஞ்சாப் பவனில் நடந்த ஒரு விழாவில் பேசிய சித்து, முதல்வரை தாக்கி பேசினார். இருப்பினும், புதிய ஏஜி நியமனத்திற்கான அறிவிப்பை அரசாங்கம் தயாரித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அஷ்வனி சேக்ரி ஏற்பாடு செய்திருந்த சன்யுக்த ஹிந்து மகாசபாவின் நிகழ்ச்சியில், "மக்களுக்கு இலவசங்களை வழங்காதீர்கள், அவர்களுக்கு ஒரு முன்னேறுவதற்கான வழியைக் கொடுங்கள்" என்று சித்து கூறினார். மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசாங்கம் அறிவித்த சலுகைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

“பஞ்சாபின் கஜானா நிரம்பி வழிகிறது என்று கூறுபவர்கள் தவறாக கூறுகிறார்கள். உண்மையாகவே நிலைமை அப்படியானால், தண்ணீர் தொட்டிகளின் மேல் ஏறி போராடிய ஒப்பந்த ஊழியர்களின் போராட்டத்தை ஏன் தீர்க்கவில்லை?”

publive-image

சித்து சன்னியின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் குறிப்பு வெளிப்படையானது. பஞ்சாபில் நிதிப் பற்றாக்குறை இல்லை என்றும், மாநில நிதி நிலைமை மக்களுக்கு நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் திறன் கொண்டது என்றும் முதல்வர் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

சித்துவின் பேச்சுக்குப் பிறகு, தியோலின் ராஜினாமா நிறுத்தி வைக்கப்பட்டது. "இப்போதைக்கு அவர் தொடர்ந்து ஏஜியாக இருப்பார்" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

“நான் ராஜினாமா செய்யவில்லை. இன்று எடுக்கப்படவுள்ள அமைச்சரவை தீர்மானங்கள் குறித்து முதலமைச்சர் சில கருத்துக்களைக் கேட்டிருந்தமையால் நான் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். நான் ராஜினாமா செய்துவிட்டேன் என்று ஊடகங்கள் ஊகிக்க ஆரம்பித்தன. பிபிசிசி தலைவரால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது, ஆனால் நான் தொடர்ந்து ஏஜியாக இருக்கிறேன். என்று தியோல் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

“இது சித்துவுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு. ஏஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கட்சி சன்னியிடம் கூறியிருந்தது. சித்து விழாவில் உரையாற்ற பஞ்சாப் பவனுக்குச் செல்வதற்கு முன்பு ஏஜி ராஜினாமா செய்ததாக ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தன. ஏஜி தியோல் முன்னாள் டிஜிபி சுமேத் சிங் சைனியின் வழக்கறிஞர் என்பதால் ஏஜி பதவி விலக வேண்டும் என்று அவரது (சித்து) மனைவி டாக்டர் நவ்ஜோத் கவுர் சித்து ஏற்கனவே கூறியிருந்தார். ஆனாலும், விழாவில் அரசுக்கு எதிராக சித்து பேசினார்” என்று ஒரு வட்டாரம் கூறியது.

publive-image

சித்துவின் பேச்சின் வீடியோ கிளிப்புகள் பரவலாகப் பரப்பப்பட்டு, கட்சித் தலைமைக்கும் சென்றடைந்ததாக அந்த வட்டாரம் மேலும் தெரிவித்தது. "கட்சி தலைமை தலையிட்டு, ஏஜியின் ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என்று சன்னியிடம் கேட்டுக் கொண்டது" என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

கட்சியின் பார்வையில் இருந்து ஆட்சேபனைக்குரிய விஷயம் என்னவென்றால், சித்து தனது அரசாங்கம் 75 சதவிகிதம் வரை மின் கட்டணத்தை குறைக்கும் "வரலாற்று" அறிவிப்பை வெளியிட்ட நாளில் சன்னியைத் தாக்கினார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சித்து, உண்மையில், சிவில் செயலகத்தில் இருந்து ஒரு கல் எறிந்து பேசினார், அங்கு அமைச்சரவை முடிவெடுப்பதை அறிவிக்க கூடியது, இதன் மூலம் மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் தன்னை முன்னிலைப்படுத்தலாம் என்று நம்புகிறது.

சித்து தனது உரையில் கூறியதாவது: மக்கள் நீதிமன்றத்தில் முடிவு எடுக்கப்படும். எஹ் நா சோச்சோ கே குரு தா இன்சாஃப் நஹி ஹோ யா. குரு தா ஆப் இன்சாஃப் கரன் வாலா ஹை, பார்க்தா ஹை, பரக் பராக் கே சர்காரன் உல்டா டிட்டியான். இக் உல்டி, டூஜி பானி, முக் மந்திரி ராஜே தோ ரங்க் ஹோ கியா, எஹ் ஓஸே டா பார்டப் ஹை.

“அவர்கள் இந்தப் போராட்டத்திலிருந்து ஒருவரைக் கண்டுபிடிப்பார். யார் தங்கம், யார் அழுக்கு என்பதை அவர்கள் தேர்ந்தெடுப்பார். உண்மையான மனிதர்கள், உண்மையான தொழிலாளர்கள் மண்ணில் கிடக்கும் நகைகள் போன்றவர்கள். அவற்றை கிரீடத்தின் நகைகளாக ஆக்குங்கள். இறுதியில், ‘மை ஹூன் நா’ என்றுதான் சொல்ல முடியும்.

சலுகைகளுக்கு எங்கிருந்து பணம் வரும் என்று கட்சியினரை சித்து கேட்டுக் கொண்டார். கருவூலம் நிரம்பி வழிகிறது என்றால், ஆசிரியர்களின் சம்பளத்தை மாதம் 50,000 ரூபாயாக ஏன் உயர்த்தவில்லை? என்று சித்து கேட்டார்.

பஞ்சாப் ரூ. 5 லட்சம் கோடி கடனில் இருந்தது உண்மை என்று கூறிய சித்து, “இந்தக் கடனை அரசாங்கம் திருப்பிச் செலுத்தும் என்று மக்கள் நினைத்தால், அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். மக்களே திருப்பிச் செலுத்த வேண்டும்…” என்றார்.

மாநிலத்தை நெருக்கடியில் இருந்து மீட்பவர்களுக்கு வாக்களிப்பார்களா அல்லது வெறும் "தீபாவளி பரிசு" கொடுப்பவர்களுக்கு வாக்களிப்பார்களா என்று சித்து மக்களிடம் கேட்டார். மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவதாக சன்னி ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்திருந்தார்.

திங்கள்கிழமை மாலை, சித்து, கேபினட் அமைச்சர் பர்கத் சிங் மற்றும் ராகுல் காந்தியின் உதவியாளரான கிருஷ்ணா அல்லவாருவை பர்கத்தின் இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.

பிபிசிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்து ஒரு மாதமாகியும், ஏஜி மாற்றப்படாததால், சித்து பொறுமை இழந்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. "நிலைமையைக் கையாள்வதற்கான" முயற்சிகள் இப்போது நடந்து வருகின்றன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment