Advertisment

ஸ்மிருதி இரானி அவதூறு வழக்கு; காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ்

ஸ்மிருதி இரானி மகள் கோவாவில் பார் நடத்திவருகிறார் என்ற காங்கிரஸ் தலைவர்களின் குற்றஞ்சாட்டு கடந்த வாரம் வலுப்பெற்றது.

author-image
WebDesk
New Update
Smriti Irani defamation suit

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் பார் நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கெரோ மற்றும் நேட்டா டி சௌசா ஆகியோர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்துள்ளனர்.

இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஸ்மிருதி இரானி தொடர்பான ட்வீட்களை நீக்க உத்தரவிட்டதுடன் இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

ஸ்மிருதி இரானி மகள் கோவாவில் பார் நடத்திவருகிறார் என்ற காங்கிரஸ் தலைவர்களின் குற்றஞ்சாட்டு கடந்த வாரம் வலுப்பெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிருதி இரானி, அந்தக் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை. வேண்டுமென்றே என் மீது வதந்தியை பரப்புகிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஸ்மிருதி இரானி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் பார் நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கெரோ மற்றும் நேட்டா டி சௌசா ஆகியோர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்துள்ளனர்.

இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஸ்மிருதி இரானி தொடர்பான ட்வீட்களை நீக்க உத்தரவிட்டதுடன் இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

ஸ்மிருதி இரானி மகள் கோவாவில் பார் நடத்திவருகிறார் என்ற காங்கிரஸ் தலைவர்களின் குற்றஞ்சாட்டு கடந்த வாரம் வலுப்பெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிருதி இரானி, அந்தக் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை. வேண்டுமென்றே என் மீது வதந்தியை பரப்புகிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Smriti Irani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment