Advertisment

ஜிசாட் 9 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஜிசாட்-9 செயற்கைகோள் விண்ணில் 12 வருடங்களுக்கும் மேல் செயல்பட்டு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sriharikota: Indian Space Research Organisation (ISRO) Launched PSLV C-45

Sriharikota: Indian Space Research Organisation (ISRO) Launched PSLV C-45

தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஜிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

Advertisment

தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய ஜிசாட்-9 செயற்கைக்கோள், இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி-எஃப்09 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதிஷ் தாவான் விண்வெளி மையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 4.57 மணிக்கு ஜிஎஸ்எல்வி-எஃப்09 ராக்கெட்டானது, ஜிசாட்-9 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது. 235-கோடி மதிப்பில் உருவான இந்த செயற்கைக்கோளுக்கு, இந்தியா முழு நிதி வழங்கியுள்ளது.

220 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட்-9 செயற்கைகோளானது 3 வருடங்களில் உருவாக்கப்பட்டது.  ஜிசாட்-9 செயற்கைகோள் விண்ணில் 12 வருடங்களுக்கும் மேல் செயல்பட்டு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது.  தெற்காசிய நாடுகளில் பேராபத்துகள் குறித்த தகவலை முன்கூட்டியே அளிக்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானை தவிர்த்து 6 நாடுகளில் தகவல் தொடர்புக்கும் உதவும் வகையிலும் செயல்படும். தகவல்தொடர்பு தொழில்நுட்பம், பேரிடர் கால மேலாண்மை, கல்வி மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுடனான தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவது தான் இந்த செயற்கைகோளுக்கான முக்கிய நோக்கம்.

இந்நிலையில், பிரதமர் மோடி தெரிவித்ததாவது:   செயற்கோளை உருவாக்கி விண்ணில் செலுத்துவதற்காக கடின உழைப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று தெரிவித்தார். சார்க் நாடுகளான, வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், நேபாளம், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் வாழ்த்து தெரிவித்துள்ளன.

Narendra Modi Sriharikota
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment