Advertisment

சிறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ1.5 கோடி லஞ்சம் கொடுத்த சுகேஷ்: 81 அதிகாரிகள் மீது வழக்கு

சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழக்கை வாழ்வதற்காக அவரிடம் இருந்து 1.5 கோடி லஞ்சம் பெற்ற சிறைத்துறை அதிகாரிக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
சிறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ1.5 கோடி லஞ்சம் கொடுத்த சுகேஷ்: 81 அதிகாரிகள் மீது வழக்கு

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழக்கை வாழ்வதற்காக அவரிடம் இருந்து 1.5 கோடி லஞ்சம் பெற்ற சிறைத்துறை அதிகாரிக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் புரமோட்டர் ஷிவிந்தர் சிங்கின் மனைவியிடமிருந்து ரூ. 200 கோடியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு சிறையில் சொகுசாக வாழ உதவியதாக 8 சிறை அதிகாரிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கைக்கு சில மாதங்களுக்குப் பிறகு, பொருளாதார குற்றப்பிரிவு (EOW) ரோகிணி சிறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 81 பேர் தன்னிடம் பணம் பெற்றதாக சுகேஷ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், சுகேஷிடம் சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக 81 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாதந்தோறும் சுகேஷிடம் இருந்து 1.5 கோடி ரூபாயை லஞ்சம் பெற்று அதனை தனது சக ஊழியர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்காக தில்லி சிறை நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக ஆறு மாதங்களாக குற்றப்பிரிவு துறையினர் காத்திருந்தது.

இந்நிலையில்,. சுகேஷின் பெயர்களைக் குறிப்பிட்ட ஏசிபி  (EOW) வீரேந்தர் செஜ்வான் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 7/8 இன் கீழ் ஒரு வழக்கு  பதிவு செய்யப்பட்டது  சிறப்புக் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எஃப்ஐஆர் எண். 208/21 இன் விசாரணை இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில், சுகேஷ் தனது கூட்டாளிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உதவியுடன் பணம் பறிக்கும் மோசடி வேலைகளை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் சுகேஷின் மனைவியும் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எவ்வித சிரமமும் இல்லாமல் இருப்பதற்கும் தான் சொகுசாக சிறையில் இருப்பதற்கும் செல்போன் உள்ளிட்ட ஆடம்பர தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கும் சுகேஷ் சிறைத்துறை அதிகாரிகளை பயன்படுத்திக்கொண்டது தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டில் தற்போது 81 சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sukesh Chandrasekar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment