Advertisment

’என் வாழ்க்கை, தொழில் அழிந்து விட்டது’: சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் சாட்சிகளாக மாறிய ஜாக்குலின், ஃபதேஹி

திகார் சிறையில் சந்திரசேகருக்கு பல நடிகைகளை அறிமுகப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளினி பிங்கி இரானிக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு (EOW) துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Jacqueline Fernandez, Nora Fatehi

Jacqueline Fernandez, Nora Fatehi

குற்றவாளியாகக் கூறப்படும் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து குற்றத்தின் வருமானத்தை அனுபவித்ததாக அமலாக்க இயக்குநரகம் (ED) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பொருளாதார குற்றப்பிரிவு (EOW வழக்கில்) நடிகை நோரா ஃபதேஹியுடன் சாட்சியாக மாறியது, இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது கூடுதல் குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது.

Advertisment

திகார் சிறையில் சந்திரசேகருக்கு பல நடிகைகளை அறிமுகப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளினி பிங்கி இரானிக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு (EOW) துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தன் கணவனுக்கு ஜாமீன் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் இருந்து ரூ. 200 கோடியை மிரட்டிப் பறித்து, சுகேஷ் ஏமாற்றியதாக, முன்னாள் Fortis விளம்பரதாரர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங் தாக்கல் செய்த எஃப்ஐஆரைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு தொடரப்பட்டது.

ரெலிகேர் ஃபின்வெஸ்ட் லிமிடெட் (RFL) நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஷிவிந்தர் 2020 ல் கைது செய்யப்பட்டார்.

இந்த வார தொடக்கத்தில், கூடுதல் அமர்வு நீதிபதி ஷைலேந்தர் மாலிக் முன் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், சுகேஷ், பிஎம்டபிள்யூ கார் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களைத் தருவதாகக் கூறி ஃபதேஹியை எப்படித் தொடர்பு கொள்ள முயன்றார் என்பதையும், பின்னர் அவரை தனது காதலியாகும்படி கேட்க, அது அவளுடைய குடும்ப உறுப்பினர்களை எப்படி "அதிர்ச்சியடையச் செய்தது" என்பதையும் விவரித்தது .

மறுபுறம் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தன் பங்கிற்கு, தன்னை ஏமாற்றிய சுகேஷ் சந்திரசேகரால் "தனது முழு வாழ்க்கையும் அழிக்கப்பட்டது" என்று நீதிமன்றத்தில் கூறினார்.

சென்னையில் சுகேஷ் சந்திரசேகரின் மனைவியும் நடிகையுமான லீனா மரியா தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு வந்ததாக ஜனவரி 13 அன்று நீதிமன்றத்தில் ஃபதேஹி தெரிவித்தார். நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, நடனப் போட்டிக்கு நடுவராகவும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பணம் அடங்கிய கவரை வழங்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

நிகழ்வுக்குப் பிறகு, சந்திரசேகர் அவளுடன் தொலைபேசியில் "சர்வதேச தொனியில்" பேசினார் மற்றும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு காரை வழங்கினார்.

இருப்பினும் ஐபோன் மற்றும் குஸ்ஸி பேக் அடங்கிய பரிசுகளை ஏற்கனவே கொடுத்ததால் அதை மறுத்துவிட்டதாக, ஃபதேஹி கூறினார். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அவளை காரில் தொடர்ந்து தொந்தரவு செய்தனர், ஆனால் அதற்கு பதிலாக அவர்கள்  பெருந்தன்மையாக இருந்ததால் அவர்களின் நிகழ்வை இலவசமாக விளம்பரப்படுத்த முன்வந்ததாக, அவர் கூறினார்.

சென்னை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய எல்.எஸ் கார்ப்பரேஷன் ஊழியர் என்று கூறிக்கொண்ட ஒரு நபர் சுரேஷை அழைத்தபோது, ​​காரை எடுக்கும்படி வற்புறுத்தினார். ஃபதேஹி தன் உறவினரான பாபியின் தொடர்பு எண்ணை, அவனிடம் ஒப்படைத்தாள்,

சந்திரசேகரும் பாபியும் ஒரு திரைப்படத் திட்டம் உட்பட வணிக வாய்ப்புகளைப் பற்றி விவாதித்தனர், அதற்காக அவர் கையெழுத்திடும் கட்டணமாக அவருக்கு BMW காரை பரிசளிக்க விரும்பினார். இருப்பினும், காரை எடுக்க ஃபதேஹி தன்னுடன் வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நான் நடப்பதுபடி சென்றேன், என்று ஃபதேஹி கூறினார்.

பின்னர், ஃபதேஹி துபாய்க்கு புறப்பட்டார், அங்கு அவருக்கு உறவினர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது, அவர் பாபியை இரானி தொடர்பு கொண்டதாகவும், சுகேஷ், பாபியின் "முழு வாழ்க்கை, குடும்பம், தொழில்" ஆகியவற்றிற்கு, நிதியளிக்க விரும்புவதாகவும், அதற்கு பதிலாக ஃபதேஹி அவரது காதலியாக வேண்டும்.

ஜாக்குலின் இதற்காக வரிசையில் காத்திருக்கிறார், ஆனால் சுகேஷ் நோராவை விரும்புகிறார், அவள் கௌரவிக்கப்பட வேண்டும் என்று இரானி தனது உறவினரிடம் கூறியதாக ஃபதேஹி கூறினார். இதைத் தொடர்ந்து, ஃபதேஹியின் உறவினர் இரானியுடன் தொலைபேசியில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஜனவரி 2 ஆம் தேதி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், சந்திரசேகர் தன்னை சன் டிவியின் உரிமையாளர் என்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்றும் தன்னை அறிமுகப்படுத்தியபோது கூறினார்.

சுகேஷ் தன்னை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை அழைப்பார், எப்போதும் டிசைனர் உடைகள் அணிந்திருப்பார், ஒருமுறை அணிந்த ஆடைகளைத் திரும்ப அணிவதில்லை. வீடியோ அழைப்புகளின் போது, ​​அவர் அறையின் மற்ற பகுதிகளில் மோசமான வைஃபை இருப்பதாகக் கூறி, அவரது அறையின் ஒரு மூலையில்- சோபாவில் அமர்ந்து அழைப்பார்.

இருப்பினும், அவரது குற்றமான கடந்த காலத்தைப் பற்றி தனக்குத் தெரிந்த பிறகு, அது ஒரு தவறான புரிதல் மற்றும் அரசியல் போட்டியின் விளைவு என்று கூறி இரானி தனது வீட்டிற்கு வந்ததாக ஜாக்குலின் கூறினார்.

அவள் மிகவும் அழுத்தமானவள், வற்புறுத்தும் குணம் கொண்டவள்... சுகேஷ் ஒரு நல்ல மனிதர் என்று நம்பும்படி என்னை தொடர்ந்து மூளைச்சலவை செய்தாள். சுகேஷ் ஒரு ஜென்டில்மேன் மற்றும் பில்லியனர் என்று அவள் என்னை நம்பவைத்ததாக ஜாக்குலின் நீதிமன்றத்தில் கூறினார்.

ஜூன் 2021 இல் சுகேஷை இரண்டு முறை சந்தித்ததாக ஜாக்குலின் கூறினார். முதல் முறையாக, சந்திரசேகர் முன்பதிவு செய்த தனியார் ஜெட் விமானத்தில், அவரது மாமாவின் இறுதிச் சடங்கிற்காக அவர் சென்றார். இருப்பினும், சில வழக்கங்களால், இறுதிச் சடங்குகளை பகலில் நடத்த முடியாது என்று சந்திரசேகர் கூறியபோது, ​​அவர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை.

பின்னர், சந்திரசேகர் அவளை ஊரை சுற்றி காட்ட அழைத்துச் சென்றார். அவர் ஆயுதம் ஏந்திய 15 பாடி கார்ட்ஸ் உடன் இருந்தார், அவர்கள் இரண்டு ரேஞ்ச் ரோவர்களில் எங்களைப் பின்தொடர்ந்தனர். சந்திரசேகரின் குடும்பத்தினரை சந்திக்க முயற்சிக்கும் போதெல்லாம், அவர் சாக்குப்போக்கு சொல்வார். சந்திரசேகரும் இரானியும் தன்னை தவறாக வழிநடத்த ஆள்மாறாட்டம் செய்யும் உத்திகள், கற்பனையான அடையாளங்கள் மற்றும் மிரட்டும் நடத்தை ஆகியவற்றைப் பயன்படுத்தினர்.

சுகேஷ் என் உணர்ச்சிகளுடன் விளையாடி, என் வாழ்க்கையை நரகமாக்கி, என் தொழிலையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டார், என்று ஜாக்குலின் பெர்னாண்டஸின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரானியின் வழக்கறிஞர் ஆர்.கே.ஹண்டூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில்: “இரு நடிகைகளும் சாட்சிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இரானியும் ஒரு சாட்சி. செய்தி நிறுவனத்தில் CFO பதவி தருவதாக இரானிக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது, மேலும் அவரை நடிகைகளுக்கு அறிமுகப்படுத்த பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இரானி சாட்சியாக வந்தால், விசாரணையை மிக வேகமாக முடிக்க முடியும் என்றார்.

சுகேஷ் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக் சுகேஷ் குற்றமற்றவர் என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment