Advertisment

ஆந்திர ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நசீர் நியமனம்; அயோத்தி, முத்தலாக் தீர்ப்புகள் வழங்கிய பெஞ்சில் இருந்தவர்

நீதிபதி அப்துல் நசீர், தனது ஓய்வுக்குப் பிறகு அரசாங்கத்திடம் இருந்து பதவி பெற்ற அயோத்தி தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் மூன்றாவது நீதிபதி ஆவார்

author-image
WebDesk
New Update
ஆந்திர ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நசீர் நியமனம்; அயோத்தி, முத்தலாக் தீர்ப்புகள் வழங்கிய பெஞ்சில் இருந்தவர்

ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அப்துல் நசீர் (எக்ஸ்பிரஸ் விளக்கப்படம்)

Apurva Vishwanath

Advertisment

அயோத்தி நில உரிமை பிரச்னை மற்றும் முத்தலாக் எதிர்ப்பு போன்ற முக்கியமான மற்றும் சென்சிடிவ் வழக்குகளை விசாரித்த பெஞ்ச்களில் ஒருவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆந்திரப் பிரதேச ஆளுநராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

ஜனவரி 4 அன்று அவர் ஓய்வு பெற்ற ஐந்து வாரங்களுக்குப் பிறகு இந்த நியமனம் வருகிறது. நீதிபதி அப்துல் நசீர், தனது ஓய்வுக்குப் பிறகு அரசாங்கத்திடம் இருந்து பதவி பெற்ற அயோத்தி தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் மூன்றாவது நீதிபதி ஆவார். பெஞ்ச்க்கு தலைமை தாங்கிய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ராஜ்யசபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நீதிபதி அசோக் பூஷன், ஓய்வு பெற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு, 2021ல் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்: ரயில் பயணங்களின் போது இந்தியர்கள் அதிகம் தேர்வு செய்யும் உணவு இதுதான் !

ஜனவரி 5, 1958 இல் பிறந்த நீதிபதி அப்துல் நசீர் 2003 இல் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2017 இல் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியை இணைத்து, பெஞ்சில் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக அவரது நேரடி உயர்வை கொலீஜியம் நியாயப்படுத்தியது.

இருப்பினும், நீதிபதி அப்துல் நசீர் பல மூத்த நீதிபதிகள் இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்வு பெற்றார் மற்றும் இந்த முடிவு சட்ட வட்டாரங்களில் புருவங்களை உயர்த்தியது. அவர் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்பு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூத்த சக நீதிபதி எச்.ஜி. ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை நிராகரித்தார். "உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதில் மதம் அல்லது ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை" என்று நீதிபதி ரமேஷ் அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து ஆண்டுகள் 10 மாதங்கள் பணியாற்றிய போது, ​​நீதிபதி அப்துல் நசீர் குறிப்பிடத்தக்க வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய பல பெஞ்ச்களில் ஒரு பகுதியாக இருந்தார். அயோத்தி தீர்ப்பில், உரிமையியல் சர்ச்சையை இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பற்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒருமித்த தீர்ப்பின் ஒரு பகுதியாக நீதிபதி அப்துல் நசீர் இருந்தார், அவர் முன்பு 4: 1 பெரும்பான்மை கருத்துக்கு எதிராக கருத்து வேறுபாடு கொண்டிருந்தார், அது பிரச்சினையை ஒரு பெரிய பெஞ்சிற்கு பரிந்துரைக்க மறுத்தது.

மசூதியில் தொழுகை நடத்துவது இஸ்லாத்தின் "அத்தியாவசிய அம்சம்" அல்ல என்று கூறிய இஸ்மாயில் ஃபரூக்கி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதியரசர் அப்துல் நசீரின் கருத்து மட்டுமே இந்த முடிவுக்கு எதிராகக் குரல் கொடுத்தது. அவர் 2017 முத்தலாக் தீர்ப்பில் 3:2 சிறுபான்மைக் கருத்தின் ஒரு பகுதியாக இருந்தார், அதில் அவர் நடைமுறை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று கூறினார்.

தனியுரிமைக்கான உரிமையை அடிப்படை உரிமையாகக் கருதிய 2017 ஆம் ஆண்டின் முக்கிய தீர்ப்பின் ஒரு பகுதியாக நீதிபதி அப்துல் நசீர் இருந்தார் மற்றும் 2021 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கோரப்பட்ட ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையை மீண்டும் கணக்கிடக் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வேண்டுகோளை நிராகரித்தார். அவர் ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய பணமதிப்பிழப்பு முடிவை நீக்கிய தீர்ப்பின் ஒரு பகுதியாக இருந்தார், மேலும் 19(2) பிரிவில் இல்லாத கூடுதல் கட்டுப்பாடுகளை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமான பேச்சுரிமைக்கு விதிக்க முடியாது என்று கூறிய அரசியலமைப்பு பெஞ்சின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக, நீதிபதி அப்துல் நசீர் டிசம்பர் 2021 இல், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் இணைந்த வழக்கறிஞர்கள் அமைப்பான அகில பாரதிய ஆதிவக்த பரிஷத்தின் 16வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் "இந்திய சட்ட அமைப்பின் காலனித்துவ நீக்கம்" என்ற தலைப்பில் பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Supreme Court Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment