3 மாதங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.
முன்னதாக லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசின் நிலைபாடு என்ன என்பது குறித்தும் விளக்கம் கேட்டிருந்தது.
லோக் ஆயுக்தா:
கடந்த 2013 ஆம் ஆண்டு மாநிலங்களில் அரத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க ‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்’ உருவாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காராஷ்ரா மாநிலத்தில் முதன்முறையாக லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, 15 மாநிலங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த சட்டம் கூறும் முக்கிய அம்சம் அரசு அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் ஊழல் செய்தது நிரூப்பிக்கப்பட்டால் அவர்களின் பதவியை பறிப்பது, கட்டாய ஓய்வு அளிப்பது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது மற்றும் பணிநீக்கம் செய்தல் போன்றவற்றையே கட்டாயமாகிறது.
இந்நிலையில், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை.
இந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா கடந்த ஜூலை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இதுக் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழ அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் கேள்வி:
தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்த போதிலும் லோக் ஆயுக்தாவின் தலைவர் யார்? போன்ற விவரங்களை தமிழக அரசு முறைப்படி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசுக்கு மதியம் 2 மணி வரை நேரம் அளித்தனர்.
அதற்குள், லோக்ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு விருப்ப இருக்கா? இல்லையா ? லோக்ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு காலதாமதம் செய்ய என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து விவரங்களையும் பிற்பகல் 2 மணிக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கு 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கு தமிழக அரசுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.