உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான கொலிஜியம் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக.2) நடைபெற்றது. இந்தக் கூட்டம் இன்றும் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஆகஸ்ட் 26ஆம் தேதியோடு ஓய்வுபெறுகிறார். தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இதற்காக தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் யூயூ லலித், டிஒய் சந்திரசூட், சஞ்சய் கிஷன், அப்துல் நசீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியின் பெயர்களை கொலிஜியம் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி ஏற்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என்ற கருத்தும் சில நீதிபதிகள் மத்தியில் எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம், தலைமை நீதிபதியின் ஒய்வு பெறும் காலத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக நடைபெறும். எனினும் இதற்கான கால அளவுகள் குறித்து கூறப்படவில்லை.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக யூயூ லலித் பதவியில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் 3 மாதங்கள் இந்தப் பதவியில் இருப்பார். மும்பையை சேர்ந்த யூயூ லலித் உச்ச நீதிமன்ற நேரடி வழக்குரைஞராக, நேரடி நீதிபதியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதியாக உயர்ந்த இரண்டாவது நீதிபதி ஆவார்.
1957இல் பிறந்த யூயூ லலித் 1983இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பதிவு செய்துகொண்டார். இவர் 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு 2ஜி விசாரணையில் மத்திய புலனாய்வு பிரிவின் சிறப்பு அரசு வழக்குரைஞர் ஆக ஆஜரானார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil