Advertisment

ஸ்வதேஷ் தர்ஷன் 2.0: 15 மாநிலங்கள், 30 நகரங்கள்... முழுமையான சுற்றுலா தலங்களாக மேம்படுத்தும் மத்திய அரசு

15 மாநிலங்களில் மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவையும் அடங்கும்.

author-image
WebDesk
New Update
Swadesh Darshan

Swadesh Darshan 2.0

கோவாவில் கோல்வா, போர்வோரிம் மற்றும் பீகாரில் உள்ள நாலந்தா, கயாவைத் தவிர, குஜராத்தில் உள்ள துவாரகா, தோலாவிராவை முழுமையான சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

Advertisment

இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட சுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ், 15 மாநிலங்களில் இருந்து 30 நகரங்கள் நிலையான மற்றும் பொறுப்பான இடங்களாக உருவாக்க பட்டியலிடப்பட்டுள்ளன.

இது நாட்டின் புதிய உள்நாட்டு சுற்றுலாக் கொள்கையின் ஒரு பகுதியாகும், இது தீம் அடிப்படையிலான சுற்றுலா சர்கியூட்களில் இருந்து விலகி, இலக்கு நிர்வாகத்தில் (destination management) கவனம் செலுத்துகிறது. 15 மாநிலங்களில் மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவையும் அடங்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் குறித்த விவரங்களை அளித்து, அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியதாவது, துவாரகாவுக்கு அருகில் (50 கி.மீ. தொலைவில்) துவாரகா-துவாரகாதீஷ் கோயில், நாகேஸ்வர ஜோதிர்லிங்க கோயில், சிவராஜ்பூர் கடற்கரை, சுதாமா சேது, ருக்மணி தேவி கோயில், கோபி தலாப் மற்றும் பத்கேஷ்வர் மகாதேவ் மந்திர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படும்.  

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம் மற்றும் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய நன்கு பாதுகாக்கப்பட்ட சிந்து சமவெளி தளங்களில் ஒன்றான தோலாவிராவில், புதைபடிவப் பூங்கா (fossil park), வியூ பாயிண்ட்ஸ், மலையேற்றம் (hiking trails), பிராந்திய கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கிராமப்புற வாழ்க்கை அனுபவம் ஆகியவை ஒரு முழுமையான அனுபவத்தை உருவாக்கும் நோக்கத்துடன் கவனம் செலுத்தும்.

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம், தீம் அடிப்படையிலான சுற்றுலா சர்கியூட்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக 2014-15ல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.

பௌத்த சுற்றுலா, வடகிழக்கு சுற்றுலா, ராமாயண சுற்றுலா, வனவிலங்கு சுற்றுலா, கிராமப்புற சுற்றுலா போன்றவை இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட முக்கிய சுற்றுலா ஆகும்.

இருப்பினும், இந்த திட்டம் எதிர்பார்த்த விதத்தில் செயல்பட முடியவில்லை, முக்கியமாக வளங்கள் பல மாநிலங்களில் பரவ வேண்டும். பல மாநிலங்களில், அதிக பங்குதாரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஒரு நேரத்தில் ஒரு இலக்கை மையமாகக் கொண்டு, ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 கொண்டு வரப்பட்டது. இது புதிய சுற்றுலாக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது, வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சுக்னா ஏரி, ராக் கார்டன், பறவை பூங்கா மற்றும் கேபிடல் வளாகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கு இடையே மூலோபாய ரீதியாக அமைந்துள்ள, சண்டிகரின் யூனியன் பிரதேசமும் புதிய திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும்.

வடகிழக்கில், அசாமின் கோக்ரஜார் - ஒரு பிரபலமான வனவிலங்கு சுற்றுலா சர்கியூட், மனாஸ் தேசிய பூங்கா, ரைமோனா தேசிய பூங்கா ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும், மஹாமாயா தாம் மற்றும் மஹாமாயா ஸ்னான் காட் போன்ற மத ஸ்தலங்கள் - ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்படும்.

மாநிலத்தின் மற்றொரு பிரபலமான வனவிலங்கு சுற்றுலாத் தலமான ஜோர்ஹாட், காசிரங்கா தேசியப் பூங்கா, கிப்பன் வனவிலங்கு சரணாலயம், மஜூலி மற்றும் சிவசாகர் ஆகியவற்றைக் காண்பிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment