Advertisment

72 சீக்கியர்கள் & இந்துக்களை IAF விமானத்தில் ஏறுவதை தடுத்த தாலிபான்கள்

Taliban stop 72 Afghan Sikhs and Hindus from boarding IAF plane: அவர்கள் ஆப்கானியர்கள்; ஆப்கானை விட்டு வெளியேற தேவையில்லை; ஐஏஎஃப் விமானத்தில் ஏற வந்த சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை தடுத்து நிறுத்திய தாலிபான்கள்

author-image
WebDesk
New Update
72 சீக்கியர்கள் & இந்துக்களை IAF விமானத்தில் ஏறுவதை தடுத்த தாலிபான்கள்

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் இரண்டு சிறுபான்மை உறுப்பினர்கள் உட்பட 72 ஆப்கானிய சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் கொண்ட ஒரு குழு சனிக்கிழமை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) விமானத்தில் ஏறுவதை தாலிபான்கள் நிறுத்தியுள்ளனர். அவர்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

Advertisment

இந்தியாவுக்கு வெளியேறக் கோரி, ஆப்கானிய சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் முதல் தொகுதி, வெள்ளிக்கிழமை முதல் 12 மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்தது என்று உலக பஞ்சாபி அமைப்பின் (WPO) தலைவர் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

தாலிபான் போராளிகள், அவர்களை IAF விமானத்தில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தி, அவர்கள் ஆப்கானியர்கள் என்பதால், அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறினர். இப்போது அந்தக் குழு பாதுகாப்பாக காபூலில் உள்ள குருத்வாரா தஷ்மேஷ் பிதா குரு கோவிந்த் சிங் ஜி கார்டே பர்வானிடம் திரும்பியுள்ளது, ”என்று சாஹ்னி கூறினார், சிறுபான்மை எம்.பி.க்கள் நரிந்தர் சிங் கல்சா மற்றும் அனார்கலி கவுர் ஹோனியார் ஆகியோர் அந்த குழுவில் இருந்தனர்.

"அவர்கள் கிட்டத்தட்ட 80 இந்திய குடிமக்களுடன் விமானத்தில் ஏறியிருக்க வேண்டும்," என்று சாஹ்னி கூறினார். மேலும், "ஆப்கானிய சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை வெளியேற்றுவதற்கான ஒரே வழி, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த ஆண்டு இறுதியில் குரு தேக் பகதூர் ஜியின் 400 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு சீக்கியர்கள் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என்று அவர்களிடம் சொல்வதுதான்." என்று சாஹ்னி கூறினார்.

தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதில் இருந்து, 280 ஆப்கானிய சீக்கியர்கள் மற்றும் 30-40 இந்துக்கள் கொண்ட குழு காபூலில் உள்ள கார்டே பர்வான் குருத்வாராவில் தஞ்சம் அடைந்துள்ளது. அவர்கள் தாலிபான் பிரதிநிதிகளுடன் இரண்டு சந்திப்புகளை நடத்தினர். அதில் தாலிபான் பிரதிநிதிகள், சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் 'அமைதி மற்றும் பாதுகாப்பு' குறித்து உறுதியளித்ததோடு நாட்டை விட்டு வெளியேற தேவையில்லை என்று கூறினர்.

இருப்பினும், மார்ச் 25, 2020 முதல், காபூலில் உள்ள குருத்வாரா குரு ஹர் ராய் சாஹிப் மீது ஒரு ஐஎஸ் தீவிரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 25 சீக்கியர்கள் கொல்லப்பட்டதில் இருந்து, இரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற இந்தியா மற்றும் கனடா அரசாங்கங்களை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் சீக்கியர்களும் இந்துக்களும் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் கடவுச்சீட்டு வைத்திருக்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள். அவர்கள் நீண்ட கால விசாக்களில் இந்தியாவுக்கு வருகிறார்கள், ஆனால் பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்கள் அந்த நாட்டில் தங்க விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்களின் வாழ்வாதார ஆதாரங்கள் முக்கியமாக காபூல், ஜலாலாபாத் மற்றும் கஸ்னி நகரங்களில் உள்ளன.

2020 ல் காபூல் குருத்வாரா தாக்குதலின் போது, ​​ஆப்கானிஸ்தானில் 700 க்கும் குறைவான சீக்கியர்களும் இந்துக்களும் இருந்தனர். அப்போதிருந்து, அவர்களில் குறைந்தது 400 பேர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான சீக்கியர்களும் இந்துக்களும் இருந்த ஒரு காலத்தில், இந்த சமூகத்தின் உறுப்பினர்கள் 1992 இல் முஜாஹிதீன் பொறுப்பேற்ற பிறகு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Afghanistan Taliban Attack
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment