Pegasus Row Issue In India : பெகாசஸ் விவகாரத்தில் "மறைக்க எதுவுமில்லை" என்றும், இந்த விவகாரம் "தேசிய பாதுகாப்பைப் பற்றியது" என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த வாரம் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரு அவைகளிலும், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி எதிர்கடசியினர் அமலில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எதிர்கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபடும் எண்ணத்தில் உள்ளனர்.
மேலும் எதிர்கட்சியினர் செய்த அமலியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதால் பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில், இந்திய தலைமை நீதிபதி என்ஜி ரமணா தலைமையிலான பெஞ்ச் இந்த பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இஸ்ரேலிய ஸ்பைவேர் பதுங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பத்து நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறியது.
தொடர்ந்து நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் அனிருத்த போஸ் அடங்கிய பெஞ்ச், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யக்கூடிய எதையும் அரசு வெளியிட உச்சநீதிமன்றம் விரும்பவில்லை என்று கூறியிருந்தனர். ஆனால் இந்த விவகாரம் "பொது விவாதத்திற்கு உட்பட்டதாக இருக்க முடியாது" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் கூறினார்,
மேலும் இந்த மென்பொருள் ஒவ்வொரு நாட்டிலும் வாங்கப்படுகிறது. மென்பொருள் பயன்படுத்தப்படாவிட்டால் மனுதாரர்கள் அதை வெளியிட வேண்டும். இதை நாங்கள் வெளிப்படுத்தினால், பயங்கரவாதிகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். இவை தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் நாங்கள் எதையும் நீதிமன்றத்தில் மறைக்க முடியாது என்று கூறிய மேத்தா மேலும் விவரங்களை நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பிக்கலாம் என்று கூறினார்.
நாங்கள் இதை ஒரு நிபுணர் குழுவிற்கு வெளிப்படுத்தலாம், அது ஒரு அரசியலமைப்பு நீதிமன்றமாக, இல்லாமல் ஒரு நடுநிலை அமைப்பாக இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகள் நீதிமன்றத்தின் முன் வெளியிடப்பட்டு, பொது விவாதத்திற்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறீர்களா? குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். ஆனால் இந்த பிரச்சினையை நாம் எப்படி பரபரப்பாக்க முடியும் என விவாதம் தொடர்ந்தது..
இந்நிலையில், பெகாசஸ் ஸ்பைவேர் பயன்பாட்டின் மூலம் கண்காணிப்பு குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் நேற்று நடைபெற்ற விசாரணையில், பெகாசஸ் விவகாரத்தில் மனுதாரர்கள் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு "சந்தேகத்திற்கு இடமின்றி" மறுத்து, உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும்"சில குறிப்பிட்ட நலன்களால் பரப்பப்படும் தவறான கதையை அகற்றும் நோக்கத்துடன்" இது தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வது குறித்துதுறையில் நிபுணர்களின் குழுவை அமைக்கும், இது பிரச்சினையின் அனைத்து அம்சங்களுக்கும் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய நிறுவனம் கூறுகையில், அரசாங்கத்தின் விமர்சகர்கள் உட்பட பலதரப்பட்ட இலக்குகளால் பயன்படுத்தப்பட்ட தொலைபேசிகளில் ஸ்பைவேர் ஊடுருவ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று உலகளாவிய ஊடக விசாரணையின் கண்டுபிடிப்புகள் குறித்து விசாரணை கோரி பல மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடினர். குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக "பெகசஸை" சரிபார்க்கப்பட்ட அரசாங்கங்களுக்கு "மட்டுமே உரிமம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.