Advertisment

தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம்; ’பொறுமையை சோதிப்பதாக’ மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

‘Testing our patience’: SC raps Centre over Tribunals Reforms Act: தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காக, மத்திய அரசை இந்த பெஞ்ச் கடுமையாகக் குற்றம் சாட்டியதோடு, சட்டத்தை "நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட விதிகளின் மெய்நிகர் பிரதி" என்றும் கூறியது.

author-image
WebDesk
New Update
தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம்; ’பொறுமையை சோதிப்பதாக’ மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் திங்களன்று மத்திய அரசைத் தாக்கியது என்று லைவ் லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காக, மத்திய அரசை இந்த பெஞ்ச் கடுமையாகக் குற்றம் சாட்டியதோடு, சட்டத்தை "நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட விதிகளின் மெய்நிகர் பிரதி" என்றும் கூறியது.

இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு மரியாதை இல்லை. நீங்கள் எங்கள் பொறுமையை சோதிக்கிறீர்கள்! எத்தனை நபர்கள் நியமிக்கப்பட்டனர்? சில நபர்கள் நியமிக்கப்பட்டதாக சொன்னீர்களா?" இந்த நிலைமை குறித்து நீதிமன்றம் "மிகவும் வருத்தமடைந்துள்ளது" என்று தலைமை நீதிபதி என்வி ரமணா கூறினார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதி டிஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு தீர்ப்பாயங்களின் நிலை குறித்து நீதிமன்றத்தின் அதிருப்தியை தெரிவித்தது. அப்போது, "எங்களுக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று, நாங்கள் சட்டப்படி செயல்படுவது. இரண்டு, நாங்கள் தீர்ப்பாயங்களை மூடி உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவது. மூன்று, நாங்களே நியமனங்களை செய்வது, ”என்று தலைமை நீதிபதி கூறினார் என லைவ் லா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சமர்ப்பித்ததை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், தீர்ப்பாயங்களில் காலியிடங்கள் மற்றும் அவை தொடர்பான ஒரு புதிய சட்டம் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணையை செப்டம்பர் 13 அன்று மேல் விசாரணைக்கு ஒத்திவைத்தது. அதற்குள் நியமனங்கள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று நீதிபதிகள் கூறினர்.

"நாங்கள் அரசாங்கத்துடன் மோதலை விரும்பவில்லை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்ட விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உறுப்பினர்கள் அல்லது தலைவர் இல்லாமல் இந்த தீர்ப்பாயங்கள் சரிந்து வருகின்றன, ”என்று தலைமை நீதிபதி கூறினார்.

அரசாங்கம் எந்த மோதலையும் விரும்பவில்லை என்றும், இந்த விஷயங்களில் பெஞ்சுக்கு உதவியாக இருந்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக கால அவகாசம் கோரினார் என்று துஷார் மேத்தா கூறினார்.

NCLT, DRT, TDSAT மற்றும் T போன்ற பல்வேறு முக்கிய தீர்ப்பாயங்கள் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் சுமார் 250 பணியிடங்கள் காலியாக உள்ளன.

நாடாளுமன்றத்தின் சமீபத்திய மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் மாதம்  13 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்ற தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம், 2021 ன் பல்வேறு விதிகளின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்த மனு உள்ளிட்ட பல புதிய மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெய்ராம் ரமேஷ், பொது நலன் கருதி இந்த மனுவை தாக்கல் செய்ததாகவும், தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம், 2021-ன் பிரிவு 3 (1), பிரிவு 3 (7), 5 மற்றும் 7 (1) ஆகியவை அரசியலமைப்பின் விதிகள் 14, 21 மற்றும் 50 ஆகியவற்றை மீறுவதாக உள்ளதாகவும் கூறினார். ஆகஸ்ட் 16 அன்று உச்ச நீதிமன்றம், விதிகளை அடிப்படையாகக் கொண்டு, தீர்ப்பாயங்கள் மீதான மசோதாவை பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றுவது "தீவிரமானது" என்று கூறியது. தீர்ப்பாயங்களுக்கு நியமனம் செய்ய நீதிமன்றம் 10 நாட்களுக்கு மத்திய அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment