Advertisment

2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மகளிருக்காக இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்!

டெல்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மகளிர்களை கவரும் வகையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மகளிருக்காக இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்!

டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மகளிர்களை கவரும் வகையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisment

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் திட்டம்.

* 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்குதல்

* வருங்கால வைப்பு நிதிக்கு பணியில் சேர்ந்த முதல் 3 ஆண்டுகளில் பெண்கள் 8% செலுத்தினால் போதுமானது.

* மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம்.

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75,000 கோடி வரையிலும் நிதி ஒதுக்கீடு.

* மகப்பேறு விடுப்பில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு

* சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் வயதான பெண்களுக்கு உதவி.

* மகளிர் சுயஉதவி குழுக்களை தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் இணைத்தல்.

* வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்க ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தலை வருவதை கருத்ப்தில் கொண்டு பெண்களை கவரும் வகையில், 2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளதாக எதிட் கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஆரோக்கியமான பட்ஜெட் என்று, பெண்களுக்கு மிகவும் பயன் பெறும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Budget 2019
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment